சனி, 17 ஜூலை, 2010

ராகுல், தி.மு.க - அ.தி.மு.க ஆகிய இரண்டில் யாரை வலுவான எதிரியாக கருதுகிறீர்கள்

தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை டில்லிக்கு அழைத்து ராகுல் பேசியுள்ளார். சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் நிலையில், தமிழகத்தின் மீது ஆர்வம் காட்டத் துவங்கியுள்ள ராகுல், மாநிலத்தில் அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி சாதக, பாதகங்கள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்துள்ள விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன், தி.மு.க., தலைமை நல்ல நட்புறவுடன் இருந்து வருகிறது. இருப்பினும், சோனியாவின் மகனும் அக்கட்சியின் எதிர்காலத் தலைவராக முன்னிறுத்தப்படுபவருமான ராகுல், தமிழகத்துக்கு எப்போது வந்தாலும் தி.மு.க., தலைவரை சந்திக்காமல் சென்று விடுவது முக்கியமாக பேசப் பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஒருசிலர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை டில்லிக்கே அழைத்து ராகுல் ஆலோசனை நடத்தியுள்ளார். நம்பர் 12, துக்ளக் சாலையில் உள்ள வீட்டில் கடந்த செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களும் இந்த சந்திப்பு நடந்தது. ராகுலை சந்தித்தவர்களில் விடியல் சேகர், அருள் அன்பரசு, காயத்ரிதேவி, ராஜ்குமார், ராம்பிரபு, விஷ்ணுபிரசாத் ஆகிய எம்.எல்.ஏ.,க்கள் முக்கியமானவர்கள். இதுதவிர கார்த்தி சிதம்பரமும் சந்தித்துள்ளார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காஞ்சிபுரம் புரு÷ஷாத்தமன், தூத்துக்குடி பெருமாள் உள்ளிட்ட மாநில மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் ராகுலை சந்தித்துள்ளனர். இவர்கள் அனைவருமே ராகுலை தனித்தனியே சந்தித்தனர். ஒவ்வொருவருக்கும் தலா 15 நிமிடங்கள் வரை ஒதுக்கப்பட்டது.

ராகுலை சந்திப்பதற்கு முன்பாக ஒவ்வொருக்கும் ஒரு விண்ணப்பம் தரப்பட் டது. அந்த விண்ணப் பத்தில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. "நீங்கள் என்ன சாதனை செய்துள்ளீர்கள், கட்சியில் உங்களது பணி எந்த அளவில் பேசப்படுகிறது, சமூகதளத்தில் உங்களது பங்களிப்பு என்ன, நடந்து முடிந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் காணப்பட்ட நிறை குறைகள் என்ன, உங்களுக்கு மீண்டும் தேர்தலில் சீட் தந்தால் ஜெயிப்பீர்களா, தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டில் யாரை வலுவான எதிரியாக கருதுகிறீர்கள், உங்கள் தொகுதி எஸ்.பி., - கலெக்டர் ஆகியோர் பெயர் என்ன?' என்பன போன்ற கேள்விகள் அதில் கேட்கப்பட்டிருந்தன. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகே, ராகுலை சந்தித்துள்ளனர். ராகுலுடன் நடந்த சந்திப்பின்போது, ஜிதின் பிரசாதா மற்றும் கனிஷ்கா ஆகியோர் உடன் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரிடமும் வேறு வேறுவிதமான விஷயங்களை ராகுல் பேசியதாக தெரிகிறது. ஒருசிலரிடம் தமிழக அரசியல் நிலவரமும், இன்னும் சிலரிடம் கட்சி நடவடிக்கைகள் குறித்தும், மேலும் சிலரிடம் கூட்டணி மற்றும் மக்களின் மனநிலை ஆகியவை குறித்த கருத்துக் களை ராகுல் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. தவிர, மாநில காங்கிரஸ் எந்த அளவில் செயல்படுகிறது என்பது பற்றியும் ராகுல் விசாரித்து அறிந்துள்ளார். மற்ற மாநிலங்கள் போல் அல்லாது தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., என இரு பெரும் கட்சிகளை எதிர்த்து காங்கிரஸ் அரசியல் செய்தாக வேண்டியுள்ளது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைமையில் புதிய அணி அமைத்தால் தமிழகத்தில் அது எந்த அளவில் எடுபடும் என்றும் முக்கியமாக பேசப்பட்டதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைக்கு அரசியல் கட்சிகள் தயாராகும் வேளையான தற்போது, ராகுல் திடீரென காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
மதுரை முத்து - madurai,இந்தியா
2010-07-17 18:28:31 IST
தமிழ் நாட்டுக்கு என்று எந்த தொலைநோக்கும் இல்லாமல் 40 வருடத்தை தொலைத்து விட்டார்கள். தற்போதும் கட்சியிலுள்ள ஒவ்வொருவரும் தன்னை நிலை நிருதிக்கொள்ளவே போராடுகிறார்கள். கட்சி என்ற கூட்டு முயற்சி அங்கு இல்லை. அப்படியே இவர்கள் கூடி எதாவது சொன்னாலும் அதை தலைமை ஒன்றும் காதில் போட்டுக்கொள்வதில்லை. உண்மையிலேயே தமிழகம் இவர்களுக்கு வேண்டும் என்று நினைத்திருந்தால் இவர்கள் மத்தியில் இருந்து கொண்டு எத்தனை திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாம்? ஆனால் காங்கிரஸ் எதயுமே செய்யவில்லை. மாறாக எதிரான போக்கிலேயே செயல்படுகிறார்கள். சேது சமுத்திரத்திட்டம் இவர்களாலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுமைக்குமான குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு அகன்ற இருவழித்தட ரயில் போக்குவரத்து என்பது எட்டாக்கனி அதற்க்கு இவர்களிடம் எந்தவிதமான முயற்சியும் இல்லை. நதிகள் இணைப்பு மூலம் நம்முடைய விவசாயிகளின் குறைகள் தீராவிட்டலும் பரவாயில்லை தேசத்தின் ஒற்றுமையாவது பராமரிக்கலாம். அதற்கும் கூட புல்லறிவு படைத்ததாகவே காங்கிரஸ் உள்ளது. அரைகுறை அறிவோடு ராகுல் எதோ சொல்கிறார். மூத்த தலைவர்கள் ஜால்ரா போடுகிறார்கள். மொத்தத்தில் காங்கிரஸ் ஒரு சாபக்கேடு....
raaki - Chennai,இந்தியா
2010-07-17 18:04:28 IST
அப்பனை போல பிள்ளை. அரகுறை. நிதானம் இல்லை, முப்பதெட்டு வயது ஆகியும் முதிச்சி வரவில்லை. தண்ணீருக்கு மக்கள் படும் கஷ்டம் புரியாமல் நதிகளை இணைப்பது தவறு என்று பெரிய விஞ்ஞானி போல் அளப்பறை. எடுப்பார் கைபிள்ளை. நம் தலை எழுத்து இன்னும் மாறவில்லை. வருங்கால பிரதமரே வருக, வந்து மன் மோகன் சிங்க் ஆட்சியில் கொஞ்சம் நல்லா போய்கிட்டு இருக்கும் நம் நாட்டை குதறி போடுங்க....
சரவணன் - abudhabi,யூ.எஸ்.ஏ
2010-07-17 18:04:16 IST
மத்தியில் ஆட்சியில் இருப்பதால் திமுகவை மிரட்டி அதிகசீட் வாங்கும் டெக்னிக் இது.சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்றாலோ, அல்ல து சமீபகாலமாக டெபாசிட் இழக்க ஆரம்பித்து இருக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலோ,பேரழிவு காங்கிரசுக்குத்தானேயொழிய திமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. வுண்மை கருத்து...
vels - villupuram,இந்தியா
2010-07-17 17:51:03 IST
திமுக வோட கூட்டணி இருந்தா காங்கிரஸ் தேட வேண்டிய நிலைமை கண்டிப்பா வரும் ஒவ்வொரு தலைவரையும் விலை பேசி வாங்கிவிடுவார்கள் மதுரைக்கு அழகிரியும் மத்த இடங்களுக்கு ஸ்டாலினும் விலை வைத்து காங்கிரஸ் ய் சீக்கிரம் வேலை முடிப்பது நிச்சயம் ....
sundar - chennai,இந்தியா
2010-07-17 17:44:50 IST
இருக்கறதை விட்டு பரகரத்தை பிடிக்க ஆசை பட வேண்டாம் தூக்கு தூக்கியாக இருப்போம் ...
பாலா ஸ்ரீனிவாசன் - Chennai,இந்தியா
2010-07-17 17:00:10 IST
யாரோட கூட்டணி வெச்சாலும் கணிசமான இடங்களை கேட்டு பெற்று ஆட்சியிலும் பங்கு கேட்க தவறிடாதீங்க, ராகுல்! இது ஒரு பொன்னான சந்தர்பம்; குட் லக்! ஆனால் அடுக்கு முன்னாடி நல்ல தலைவர் ஒருவரை உருவாக்குங்கள்....
மனித நேயன் - abudhabi,யூ.எஸ்.ஏ
2010-07-17 16:42:26 IST
ராகுல் இல்லை அவர் தாத்தா வந்தாலும் திராவிட கட்சிகளை விஞ்சி தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளரவே முடியாது....
ஷேயஹு - chennai,இந்தியா
2010-07-17 12:32:35 IST
ராகுல், தமிழ் நாட்டில் திமுக, அதிமுக இருக்கும் வரை உங்கள் பருப்பு வேகாது. உங்கள் அப்பா பறந்து பறந்து குட்டிக்கரணம் போட்டும் ஒன்றும் ஆகவில்லை. வெண்ணை திரளும் போது தாழியை உடைத்து விடாதீர்கள். இந்த தேர்தலை திமுக வோடு சந்தியுங்கள். அதிமுக இந்த தேர்தலோடு அழிந்து விடும். அத்தோடு திமுக தலைமையிலும் காலத்தின் கட்டாயத்தால் மாற்றம் வரும். அப்போது காங்கிரஸ் பிரதான கட்சியாகி விடும். மூச்சு திணறலில் இருக்கும் அதிமுகவுக்கு ஆக்சிஜன் கொடுத்து விடாதீர்கள்....
கே.கலைச்செல்வன் - udumalaipettai,இந்தியா
2010-07-17 12:32:11 IST
கருத்து தெரிவித்துள்ளவர்களில்,திரு அமானுல்லா,திரு மாதவன் இவர்களைத்தவிர மற்றவர்களெல்லாம் ஏதோ உள்நோக்கத்துடன் உண்மைக்கு மாறான விஷயங்களை தெரிவித்துள்ளனர்.1967 இல் தமிழகத்தில் மக்களால் தூக்கி எறியப் பட்ட காங்கிரஸ் அதோடு ஒழிந்து போனது.மக்களும் காங்கிரசை சுத்தமாக மறந்து விட்டனர்.காமராஜருக்குப் பிறகு மக்களுக்கு அறிமுகமான தலைவர்கள் யாரும் காங்கிரசில் உருவாகவே இல்லை. 1967 இல் தமிழகத்தில் மரணப் படுக்கையில் விழுந்த காங்கிரஸ் இதுவரை கூட்டணி பலத்தில்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இலங்கைத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் செயல்பட்ட விதத்தால் சென்ற நாடாளு மன்றத் தேர்தலில் திமுகவிற்கு சிறிது பின்னடைவு ஏற்பட்டது. அதனால்தான் காங்கிரஸ் போட்டியிட்ட இடங்க ளில் மட்டும் அதிகபட்சமாக அதிமுக கூட்டணி ஜெயித்தது.இளங்கோவன் போட்டியிட்டதால்தான் மதிமுக வேட்பாளர் கூடஅதிசயமாக ஜெயித்தார். திமுக,அதிமுகவைப்போல் கிளை அமைப்புகள் ஏதுமில்லாத காங்கிரசோடு கூட்டணி வைத்தால் தேர்தல் நேரத்தில் கழுத்தில் ஏறிய கிழவனை தூக்கி சுமந்த சிந்துபாத்தைப்போல் கூட்டணிக்கட்சிகள் பாடுபட்டே யாகவேண்டும். மத்தியில் ஆட்சியில் இருப்பதால் திமுகவை மிரட்டி அதிகசீட் வாங்கும் டெக்னிக் இது.சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்றாலோ, அல்ல து சமீபகாலமாக டெபாசிட் இழக்க ஆரம்பித்து இருக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலோ,பேரழிவு காங்கிரசுக்குத்தானேயொழிய திமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. சின்னத்தம்பி ராகுல் காட்டும் அதீத கெட்டிக்காரத்தனத்தின் (TRYING TO ACTSMART) முடிவு அனேகமாக அழுத்தக்காரனுக்கு கிடைக்கும் புழுத்த கத்தரிக்காயாகக் கூட இருக்கலாம்!!!......
gknatarajan - chennai,இந்தியா
2010-07-17 12:31:36 IST
it is high time, congress make a start by asserting themselves in t.n., can take, vijayakanth in thier fold![even if the do not get majority, to prove they are a force and can slowly gain power in future! either MR P.C.,,,or MR VASAN can be projected as C.M.! natarajan...
ஆயிரத்தில் ஒன்னு - Vellore,இந்தியா
2010-07-17 12:31:28 IST
(2/2).. ஆனா அது தேர்தல் வரைக்கும் தான். அதுக்கப்புறம் எப்படீன்னு சொல்ல முடியாது. அது தேர்தல் முடிவை பொறுத்தது. ஏதாவது ஏடாகூடமா ஆச்சி.. கேப்பாங்க பாரு கேள்வி.. அப்படி கேப்பாங்க. அஆங்.. நீங்க பயப்படாதீங்க. இதுக்கெல்லாம் போயி பயந்தா எப்படி? இன்னும் எவ்ளோ இருக்குது. ஆங் அப்புறம் ஒரு ‍‍‍ஒரு personal advice இல்ல friendly opinion னு வச்சிக்குங்கோ.. தப்பி தவறி எங்க செல்வி. அம்மா கூட கூட்டணி வச்சிட்டீங்கன்னா, தயவு செய்து எந்த பொது கூட்டத்திலயும் அவுங்க இல்லாம தனியா மட்டும் கலந்துக்காதீங்க. ஆமா அப்புறம் ஏதாவது ஏடாகூடமா நடந்து போச்சின்னா நாங்க‌ பொறுப்பு கெடையாது. செல்வி. அம்மா வேற எதாவது அனுதாப அலை அடிக்காதான்னு காத்துக்கிட்டு இருக்குறாங்கோ.. உஷாரு!! கடைசியா.. மறுபடியும் ஒரு முறை உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன்.. எங்க செல்வி. அம்மா கூட கூட்டணி வச்சுக்குங்க. please முழுசா இல்லன்னாலும் பரவாயில்லை.. வேணும்னா தமிழ் நாட்டில் உங்க கட்சியிலயிருந்து ரெண்டு கோஷ்டிங்களை மட்டுமாவது எங்களோட கூட்டணி வச்சுக்க அனுமதிக்கணும்னு செல்வி. அம்மா அவர்கள் சார்பா கேட்டு கொள்கிறேன். நன்றி!...
பாலகுமார். S - Thoothukudi,இந்தியா
2010-07-17 12:27:22 IST
இப்பொழுதே கட்சிக்குள் அடிதடி தொடங்கி இருக்கும். யார் காமராஜ் ஆட்சிக்கு தலைமை தாங்குவது என்று. முதலில் சரியான தொண்டர் படையை உருவாக்குங்கள். காங்கிரஸ் ஒன்றும் MNC இல்லை. நினைத்தால் ஆட்களை பணியில் அமர்த்த. கொஞ்சம் யோசிக்கவும் - எடுத்தேன் கவிழ்த்தேன் போன்ற முடிவுகளை எடுக்கும் முன்னர்....
ப சித்தார்த்தன் - Doha,ரீயூனியன்
2010-07-17 12:17:49 IST
திமுகா வின் சாதனைகள், கட்சியின் பலம், பணம் , எதிர்கட்சிகளின் விரக்தி , அதிமுக சோர்வு -தொண்டர்கள் வெளியேறியது போன்ற பலபல சாதகங்கள் திமுகவுக்கு உண்டு. மேலும் தமிழ் நாடு அளவில் பெரிய அளவில் ஊழல் இல்லை. கட்சிகாரர்கள் அதிகமாக சம்பதிதுவிட்டர்கள். செலவு செய்வார்கள். அரசு ஊழியர்கள் அனைவரும் திமுகவிற்கே ஒட்டு போடுவார்கள். எனவே திமுக அமோக வெற்றிபெரும்....
masilamani.r - coimbatore,இந்தியா
2010-07-17 11:37:13 IST
Expecting infight in THE FIRST FAMILY in the near future, It is hightime that Congress start thinking on riding independant horse ....
கான் - india,இந்தியா
2010-07-17 11:08:42 IST
அ.தி.மு.க-தி.மு.க தவிர மற்ற அனைத்து கட்சிகளையும் இணைத்தால் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. முதலில் உங்கள் கட்சியில் சார்பாக முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்துங்கள்....
Sagar Anantham - Chennai,இந்தியா
2010-07-17 10:58:07 IST
இதில் என்ன பெரிய ஆச்சரியம் இருக்கிறது. அவரவர் கட்சியை பலப்படுத்த அக்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்துவது பெரிய விஷயமில்லையே! இதற்கு ஏன் கண் காது வைத்து கூட்டணி முறிவு என்று எல்லாம் கற்பனை செய்து செய்திகளை உருவாக்குவது தவறு. வேண்டுமென்றால் காங்கிரஸ் கூட்டணிக்கா நாக்கை தொங்கப்போட்டுகிட்டு அலையும் பச்சையம்மாவின் அடிவருடிக்களுக்கு ஆனந்தத்தை வேண்டுமென்றால் அளிக்கும். அவர்கள் ஆனந்தக்கு அல்ப ஆயுசுதான். சோனியா காந்தி திமுகவுடன் கூட்டணியில் மிக உறுதியாக இருக்கிறார். பச்சையம்மா செய்த துரோகமும் அவமானமும் சோனியா அவர்கள் அவ்வளவு சுலபத்தில் மறக்க தயாராக இல்லை....
கண்ணதாசன் - chennai,இந்தியா
2010-07-17 10:32:44 IST
hai ragul sir please dis connet your connection in DMK and new connetting for ADMK next minister Amma one on only...
கார்தீசன் - jeddah,சவுதி அரேபியா
2010-07-17 10:28:48 IST
கருணாவின் சக்தி தெரியாமல் இந்த குழந்தை விளையாடுகிறது, இன்று வெளியாகி உள்ள ஸ்டாலினின் பேட்டியை படியுங்கள், அண்ணன் தம்பி போட்டி இந்த இடைதேர்தலில் இல்லை என்பது நிச்சயம், இந்த இடைதேர்தல் தி.மு.க மற்றும் அ.தி.மு.கவிற்கு எதிர்காலத்தின் கடைசி வாய்ப்பு. இரண்டுமே விழித்து கொண்டது. காலத்திலும் இறங்கி விட்டார்கள். காங்கிரஸ் என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை. காங்கிரசுக்கு மாற்றாக பா.ம.கவையும், திருமாவையும் கடைசியில் கம்யூனிஸ்ட்களையும் வைத்துள்ளார், ராகுல் எடுக்கும் முடிவு தொங்கு சட்டசபை முறையை தமிழகத்துக்கு அறிமுகம் செய்யும் என்று தோன்றுகிறது....
M கணேஷ் பாண்டியன் - சென்னை,இந்தியா
2010-07-17 10:24:36 IST
காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி பூசல் சரி ஆகாதவரை அவர்களால் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியாது. (அது சரியாகாதபடி நம் முதல்வர் பார்த்துக்கொள்வார் ?) அவர்கள் ஈழ தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை?...
ந.suresh - tirupur,இந்தியா
2010-07-17 10:02:48 IST
சந்தோஷ் மற்றும் அவரது அம்மா கூட்டணி பிச்சை கேட்கிறார்கள்.ராகுல் தயவு செய்து பாத்திரம் அறிந்து பிச்சை போடுங்கள்.பச்சை பாட்டி உங்களை தேவைக்கு பயன்படித்தி விட்டு அப்புறம் உங்களை குப்பற தள்ளி விட்டு விடும். ஆ.தி.மு.க. கட்சி தமிழ்நாட்டில் இல்லை .ஆ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க ஆசைபட்டால் ஆ.தி.மு.க.விற்கு 117 இடம் மட்டும் கொடுக்கவும்.இப்ப அல்லிராணி இருக்கும் சூழ்நிலையில் அதற்கே சம்மதிக்கும் .உங்கள் கட்சியும் தமிழ்நாட்டில் வளரும் .தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தாலும் இதே இடம் கேட்க வேண்டும் .இது தான் நல்ல நேரம் உங்கள் கட்சி தமிழ்நாட்டில் வளர....
singam - namakkal,இந்தியா
2010-07-17 09:56:37 IST
பிரயோஜனமில்லை .........தி மு க ,அ.தி மு க ..எல்லாம் குழிக்குள் போய்கொண்டு இருக்கிறது ....மற்ற கட்சிகளுக்கு ஏற்கனவே சமாதி கட்டியாகி விட்டது ....காங்கிரெஸ் தனியாகவோ ...கூட்டணி யுடனோ நின்றால் ஊ ஊ ஊ ஊ ஊ....................
பாலா - coimbatore,இந்தியா
2010-07-17 09:49:34 IST
FIRST all the congress man implement gandhiji in dream which has been disolve the congress party...
Arjun - Singapore,ஸ்லேவாக்கியா
2010-07-17 09:48:30 IST
ராகுல் நினைப்பதெல்லாம் சரிதான். ஆனால் இதெல்லாம் நடைமுறைக்கு வராது என்பதே உண்மை. காங், தேமுதிக, கம்யூனிஸ்ட், பாமக இது ஒரு அணி, அதிமுக, மதிமுக இது ஒரு அணி, திமுக, பாஜக ஒரு அணி இப்படி ஒரு தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி பெறும், காங் கூட்டணி இரண்டாம் இடத்திற்கு வரும், திமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படும். ஓட்டுகளைப் பொறுத்தவரை அதிமுகவிற்குத்தான் அதிக ஓட்டுகள் உள்ளன. பெரும்பாலும் கூட்டணியைப் பொறுத்த வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. நன்றி...
மணிகண்டன் - Tamilnadu,இந்தியா
2010-07-17 09:28:44 IST
தமிழ்நாட்டில் பூதக்கண்ணடி வைத்து தேடினாலும் காங். தொண்டர்களை காண முடியாது. மிகச்சிறந்த கூட்டணி கட்சி திமுகா தான், ஜெயலலிதா, சோனியாவை எப்படி எல்லாம் விமர்சித்தார், என்பது ராகுலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தெரியாதா. மத்தியில், பிஜேபி, அரசுக்கு எப்படி எல்லாம் தொந்திரவு கொடுத்தார் என்பதை திரு. வாஜ்பாய் அவர்களை கேட்டால் சொல்லுவார். தேர்தல் வரை தான் அம்மா மரியாதை கொடுப்பார், தேர்தல் முடிந்தால் கேவலப்படுத்துவார், இது அரசியலில் உள்ள எல்லாருக்கும் தெரியும். அரசியல் ஒரு கார்பரேட் கம்பெனி அல்ல, என்பது ராகுலுக்கு தெரியாது போலும், அதிமுகாவுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம்....
வி.கணபதி - Dubai,இந்தியா
2010-07-17 09:24:11 IST
" கட்சி கூட்டணிய கூட்டி கட்சிய பத்தி மட்டும் பேசுங்க ...? வேற ஏதும் பேசாதிங்க. என்ன நாட்டுக்கு நல்லது நடந்துரும் பாரு. அதான்? நீங்க நல்லது பண்ணினா தானே ஜெயிக்கிரதுக்கு .,...? எதற்கு இந்த வெட்டி கூட்டம்.....நடப்பது தான் நடக்கும் ....
Ilango - Pondicherry,இந்தியா
2010-07-17 08:53:06 IST
Dear Rahul, The best formula would be... Have a deal with ADMK for 50%..50%. Let JJ be a CM and Jayanthi be a DCM. Ask ADMK to accomodate Vijayakanth and you can accomodate PMK. Let ADMK share 10% seats to Vijayakanth and Congress share 15% seats to DMK. This formula will work out....
தனா - chennai,இந்தியா
2010-07-17 08:51:25 IST
திரு ராகுல் அவர்களே, தி மு க வை விட்டு நீங்கள் வெளியே வந்தால் கண்டிப்பாக வருத்தபடுவீர்கள். தி மு க வை விட்டு பிரிந்தால் கண்டிப்பாக உங்கள் காங்கிரஸ் கட்சி மீண்டும் பழைய நிலைமைக்கு போய்விடும் . ஒரு சிலர் பேச்சை கேட்டு வீணாக காங்கிரஸ் ஐ மண்ணை கவ்வ வைத்து விடாதீர்கள். over confidence வேண்டாம் ....
DESINGU M - DALMIAPURAM,இந்தியா
2010-07-17 08:49:28 IST
No party can come to power in Tamilnadu with Congress....
Balakumar - Thoothukudi,இந்தியா
2010-07-17 08:39:54 IST
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகி விடாமல் பார்த்துகொள்ளவும். ரெண்டு பேரும் கைவிட்டால் என்ன பண்ண உத்தேசம்?...
முந்திரிகொட்ட - ahmedabad,இந்தியா
2010-07-17 07:55:18 IST
டியர் ராகுல்ஜி தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனியாக அரசு அமைய ஆசைபட்டால் நிச்சயம் மக்கள் சந்தோஷபடுவார்கள். ஆனால் ஒரு தனி அதிகாரம் கொண்ட தலைவர் தேவை கோஷ்டிகளை ஒழித்து ஒரு தலைவர் முறை வேண்டும். அந்த நிலை வரும் வரை என் ஒட்டு காங்கிரஸ் திமுக அணிக்கே. ஜெயலலிதா ஆட்சியை பிடிக்கும் வரை தான் பணிந்து அடங்கி இருப்பார்கள். அதன் பிறகு ராகுல் அவர்களே போயஸ் கார்டனில் அம்மாவின் அழைப்புக்கு காத்திருக்கவேண்டும். இது நிஜம்...
CJKANNAN - sivagangai,இந்தியா
2010-07-17 07:50:11 IST
அதிமுக உடன் கூட்டணி அமைந்தால் தமிழக காங்கிரஸ் வளர வாய்ப்பு உள்ளது, இல்லையேல் தமிழக காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மட்டும் "நன்கு' இருப்பர் (திமுக உடன்). கட்சியை வளர வைக்க அல்ல....
prakash - dubai,யூ.எஸ்.ஏ
2010-07-17 07:36:25 IST
ஆல் தி பெஸ்ட் ,...
ப. MADHAVAN - chennai,இந்தியா
2010-07-17 06:36:34 IST
எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் தமிழகத்தில் காங்கிரஸ் வருவது கஷ்டம்தான்....
kilavansethupathi - chennai,இந்தியா
2010-07-17 06:23:50 IST
ராகுல் காந்தி அவர்களே எங்கள் தமிழ் நாட்டில் மொத்தம் எத்தனை காங்கிரஸ் உள்ளது மொத்தம் எத்தனை தலைவர்கள் உள்ளார்கள் . எத்தனை ஆதரவாளர்கள் .அதோடு எத்தனை கோஷ்டிகள் உள்ளன.அதற்க்கு யாரெல்லாம் தலைவர்கள் என்பதையும் கொஞ்சம் விசாரித்து வையுங்கள்.எனக்கு என்னமோ தொண்டர்களைக் காட்டிலும் தலைவர்கள் அதிகம் உள்ள கட்சி காங்கிரஸ் கட்சி என்று சொல்லலாம்.கட்டாயம் யாருடனாவது சேர்ந்தே தேர்தலை சந்திப்பது நல்லது.கொடிகட்ட போஸ்ட்டர் ஓட்ட நம்மிடம் தொண்டர்கள் குறைவு .எல்லாமே தலைவர்கள்தான் ஒரு விஷயத்தில் மட்டும் எல்லா கோஷ்டிகளும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் .பாராட்டலாம் .அது வேறு ஒன்றும் இல்லை . பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி அமைப்போம் என்பதை மட்டும் தனியாக சொல்லாமல் எல்லா கோஷ்டியும் சேர்ந்தே சொல்கிறார்கள் .ஜெய் ஹிந்த் வந்தே மாதிரம். சேதுபதி....
2010-07-17 06:17:48 IST
வெளிப்படையாக பார்க்கும் போது திமுக மத்திய அரசுக்கு எந்த வித இடைஞ்சலும் சஞ்சலமும் இல்லாமல் ஆதரவு அளித்து வருவது போல தெரிந்தாலும், இவர்கள் மத்திய அரசை தங்களின் ஆதரவு மூலம் கடந்த பத்து வருடங்களாக எப்படில்லாம் சுரண்டுகிறார்கள் என்பது தெரிய வரும். இவர்கள் மத்திய அரசில் பங்கு பெற்றதின் மூலம் தமிழ் மக்களுக்கோ தமிழ் நாட்டுக்கோ எந்த வித பலனும் கிடையாது. எந்த வித பயமும் உள்மனமும் இல்லாமல் சுரண்டோ சுரண்டு என்று சுரண்டி தங்கள் சொத்தை கூட்டுகிறார்கள். இந்த காரணத்தால் தான் டி.ஆர். பாலு மந்திரி பதவியில் இருந்து கழட்டி விடப்பட்டார். ராசா வேறு சில காரணங்களால் ஒரு லட்சம் கோடி ஊழல் செய்தாலும் (this century 's mega fraud) ஓட்டிக்கொண்டிருக்கிறார். அதனால் ராகுல் உள்ளபடியே ஊழலை ஒழித்து அராஜகத்தை கட்டுப்படுத்த என்னுவாறே என்றால் திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும். அதற்கு அவர் ரொம்ப கஷ்டப்பட வேண்டும். சுயநலமே சரீரமாக கொண்ட பசி, வாசன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்களுக்கு கோபாலபுரம் நல்ல தீனி போட்டு தங்கள் பக்கம் இழுத்து கொண்டு விட்டது. இவர்கள் அதிமுகவுடன் கூட்டணி என்றால் பழைய ஜனநாயக பேரவையையும் மூப்பனார் காங்கிரசையும் மறுபடியும் துவக்கி கோபாலபுரத்துக்கு கோடி தூக்குவார்கள். ஏன் என்றால் தோற்றவரை ஜெயிக்க வைத்தவர் முக; கப்பல் வழி துறையை கொடுத்து வாசனை வெயிட் போட வைத்தவர் இந்த மஞ்சள் துண்டு. ஒன்று மட்டும் இவர்கள் மனதில் கொள்ள வேண்டும்: இப்போது தமிழ்நாட்டில் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடந்தால் திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க மக்கள் தயாராகி விட்டனர்....
jaykay - India,இந்தியா
2010-07-17 06:02:00 IST
ஹலோ ராகுல், தமிழகத்தில் காங்கிரஸ் தனியாகவோ, கூட்டணியாகவோ போட்டி இடுவதற்கு முன்னால், தமிழக மக்களுக்கு இலங்கை பிரச்சினையில் காங்கிரஸின் நிலைபாடு, அவர்களுடய வாள்வாதரதிர்க்கு என்ன செய்வது என்பதுகுறித்து விளக்க வேண்டும். எல்லாவற்றிக்கும் திமுகவை நம்புவது, தன் தலையில் மண்ணை வாரி போட்டுகொள்வதற்கு சமம். விலைவாசி உயர்வு, மின்சார தட்டுபாடு, நதிநீர் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது போன்ற விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். தமிழக மக்கள் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக நல்ல ஆட்சி வேண்டும் என்று நினைக்கிறார்கள். தூற்றுகிரவர்களைபற்றி கவலைபடாமல் தமிழகத்திற்கு ஒரு நல்ல ஆட்சியை, காமராஜர் ஆட்சியைபோல் திறமையான ஆட்சியை கொடுபதற்க்கு முயற்ச்சி செய்யவும். குறிப்பாக தற்போது உள்ள தலைவர்கள், சட்டமன்ற உறுபினர்களை தவிர்த்து, பொதுமக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவு எடுக்கவும். உங்கள் முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்....
Narayanan - Chennai,இந்தியா
2010-07-17 05:22:35 IST
In my sincere opinion the Congress must contest independently . This party must prove/show their strength . Then only the other local parties know their fate. Therefore Congress must contest independently....
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-07-17 04:27:48 IST
மஞ்சள் துண்டு கோமானுக்கு தூக்கம் கெட்டு போச்சு. இனிமேல் அவருக்கு தூக்கமே இல்லை. அய்யா ராகுல் காந்தி அவர்களே, ஒன்னு தனியாக மூன்றாம் அணி அமைத்து போட்டியிடுங்கள் இல்லை அதிமுகவுடன் கூட்டணி சேருங்கள், தயவு செய்து திமுகவுடனான கூட்டணியை முறித்துவிடுங்கள், இல்லை உங்கள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திவிடுவார்கள். உங்கள் முடிவை நான் வரவேற்கிறேன்....
John - Roma,இந்தியா
2010-07-17 03:59:52 IST
வெரி குட் ராகுல்; முதலில் விஜயகாந்தை சந்திக்க ஏற்பாடு செயுங்கள். இரண்டு கம்யூனிஸ்டுகளும் வரும். ஒரு MP சீட் கொடுத்தால் PMK வரும்; வாசனை சரி கட்டி சிதம்பரத்தை CM என அடையாளம் காட்டுங்கள். தமிழ் நாட்டுக்கு மாற்றம் கட்டாயம் தேவை. விஜயகாந்த் உங்கள் நேரத்துக்காக பொறுத்திருங்கள். மகர் அவர்களே எத்தனை ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தார். மக்களே மற்றம் மட்டுமே மாறாதது. மாத்தி யோசி....
Karuppiah Sathiyaseelan - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
2010-07-17 02:46:20 IST
TN Congress should stand alone & they can form "Kamarajar Rule",in next TN assembly election....
மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-07-17 00:14:43 IST
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஏதாவது ஒரு திராவிட கட்சியின் தோளில் சவாரி சென்று ஆக வேண்டும் என்பது தான் தலைவிதி. இது ராகுலுக்கும் நன்கு தெரியும்.அவருடைய இந்த ஸ்டண்டுகள் எல்லாம் பா.ம.க. பாணியில் திமுகவை மிரட்டி அதிக இடங்களை பெற வேண்டும் என்பதற்காக தான்....

கருத்துகள் இல்லை: