வியாழன், 8 ஆகஸ்ட், 2019

RSSன் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது திமுக மட்டுமே...

Kandasamy Mariyappan : RSS ஊடகங்களின் மிகப்பெரிய வெற்றி:
கலைஞர் இறந்த பிறகு, ஒவ்வொரு துறையிலிருந்தும் அவருக்காக நடத்தப்பட்ட புகழாஞ்சலி கூட்டத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அவருடைய பங்களிப்பு என்ன என்று விளக்கி கூறும்பொழுது, தமிழ்நாட்டு மக்கள் மலைத்து போய் நிற்கின்றனர்.
அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளில் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவரைப்பற்றி புகழ்வதும் கலைஞரின் ஒவ்வொரு செயல்களால்தான் தானும் தனது மாநிலமும் இவ்வளவு தூரம் முன்னேறியுள்ளோம் என்று நன்றி கூறுகின்றனர்.
இப்படி தன்னலமற்று உழைத்த தலைவரை ஏன் இந்த மக்கள் படு மோசமாக சித்தரித்தனர் என்று எல்லோருக்கும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
அதுதான் உயர்சாதி மற்றும் RSS ஊடகங்களின் கைங்கர்யம். 70களில் எப்படி கலைஞர் மற்றும் திமுகவை இழிவுபடுத்தினார்களோ அதே வைளையை இப்பொழுதும் செய்கின்றனர்.
அனைத்து ஊடகங்களும் திமுகவிற்கு எதிராகவே வேலைகள் செய்கின்றன. சமூகவலைதளங்களில் சம்பளம் கொடுத்து முழுநேர பணியாக செய்ய வைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஒரு அடிமையான, கையாலாகாத அரசு ஆட்சியில் இருக்கிறது. இவர்களுடைய ஒரே வேலை இங்கே கொள்ளையடித்த பணத்தை பாஜகவின் அலுவலகத்தில் கொண்டு சேர்ப்பது மட்டுமே. மத்தியில் ஒரு ஃபாசிச அரசு உள்ளது.

சீமான், கிருஷ்ணசாமி, கமல், அன்புமணி போன்ற RSS கைக்கூலிகள் அடிமை அரசையும், ஃபாசிச அரசையும் விமர்சிப்பதை விட்டுவிட்டு திமுகவை பற்றியும் திமுக தலைமையின் நடவடிக்கைகளை பற்றியுமே விமர்சனம் செய்து கொண்டுள்ளனர்.
சற்று சிந்தியுங்கள் சன் டிவி, கலைஞர் டிவி என்ற திமுகவிற்கு சாதகமான ஊடகங்கள், மேலும் ஒவ்வொருவர் கையிலும் ஊடகங்கள் என்று இப்படி இருக்கும் பொழுதே, 8 வருடமாக ஆட்சியில் இல்லாத திமுகவை பற்றி மட்டுமே தூற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் அனைத்து ஊடகங்களும், அரசு அதிகாரிகளும், நீதித்துறையும் அவர்கள் கையில் இருந்த பொழுது எப்படியெல்லாம் திரித்து எழுதியிருப்பார்கள்.
இத்தனை ஆண்டுகளாகவும் மாநிலத்திலும் மத்தியிலும் அவர்களுக்கு சாதகமான அரசு இருந்த பொழுதும் கலைஞர் மீது ஒரு FIR இல்லை, ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை.
ஆனால் மாவட்ட நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை அவர்களுடைய ஆட்கள், மாநிலத்திலும், மத்தியிலும் அவர்களுடைய ஆட்சி. இவ்வளவு இருந்தும் ஜெயலலிதா குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வளவு சொத்துக்களும் கொள்ளையடித்து சம்பாதித்தது நிரூபிக்கப் பட்டுள்ளது.
ஆனாலும் சீமான், கமல், அன்புமணி உட்பட ஜெயலலிதாவை விமர்சிப்பதோ, திட்டுவதோ இல்லை, ஆனால் ஒவ்வொரு நிமிடமும் கலைஞரை மட்டுமே விமர்சிக்கின்றனர்.
காரணம் உளவியல். RSSன் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது திமுக மட்டுமே.
இதனை உணர்ந்தால் நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். இல்லை என்றால் நம்மை அழித்து விடுவார்கள்.

கருத்துகள் இல்லை: