சனி, 10 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் .. திமுக அனைத்துக்கட்சி கூட்ட தீர்மானங்கள் : மறுசீரமைப்பு சட்டத்தை நிறுத்தி வைக்கவேண்டும் ....

காஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்தி வைக்கவேண்டும் - திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்மாலைமலர் : காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டத்தை
நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இன்று மாலை நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை: காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியது. அத்துடன், அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரித்தது. காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதால், காஷ்மீர் மாநிலம் விரைவில் பிரிக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
 இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. அக்கட்சிகளின் சார்பில் கி.வீரமணி, வைகோ, தங்கபாலு, ரவி பச்சமுத்து, திருமாவளவன் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 தினகரன :  சென்னை: காஷ்மீர் பிரச்னை குறித்து விவாதிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ  ஆகியவை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. அவைகளிலும் மசோதா நிறைவேற்றம்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா  ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. ஜம்மு- காஷ்மீர் தொடர்பான மசோதாக்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா இரு அவைகளிலும் தாக்கல் செய்திருந்தார்.  இந்த மசோதா மீதான விவாதத்தில்  காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்புக்கு தெரிவித்தனர். அதன் மீதான காரசார விவாதங்கள்  நடைபெற்று வந்த நிலையில், மாநிலங்களவை மற்றும் மக்களவையில் இந்த மசோதாக்கள்  நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், காஷ்மீரில் இயல்புநிலை திரும்பி வரும் நிலையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் தனித் தனி யூனியன் பிரேதேசங்களாக செயல்படுவதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியது குறித்த அறிவிப்பு அரசிதழில்  வெளியிடப்பட்டது. அதில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் தனித் தனி யூனியன் பிரேதேசங்களாக செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டம்:

இதற்கிடையே, திமுக தலைமை கழகம் கடந்த 6-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘காஷ்மீர் பிரச்னை குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 10.8.2019 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை, அண்ணா  அறிவாலயத்தில் அனைத்துகட்சி கூட்டம் நடைபெறும்’’ என கூறப்பட்டது. இதனையடுத்து இன்று மாலை 5 மணியளவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில்  தங்கபாலு, கோபண்ணா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகம் சார்பில் கலி.பூங்குன்றன், மனித நேய ஜனநாயக  மக்கள் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்

கருத்துகள் இல்லை: