வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ... 2 லட்சம் தனியார் கேபிள் இணைப்புக்களின் உரிமையாளர்


தமிழ்நாடு அரசு கம்பி வடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை திரு.ராதாகிருஷ்ணன், 2 லட்சம் கேபிள் இணைப்புகள் கொண்ட தனியார் கேபிள் நிறுவனத்தை நடத்தி வருகிறார்” என்று அ.தி.மு.க அமைச்சரவையில், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த திரு.மணிகண்டன் குற்றம் சுமத்தியிருக்கிறார்.
அது மட்டுமா? “தரநிலை வரையறை மேலமர்வு பெட்டிகள் (SD Set Top Box) தயாரிக்கும் “வில்லட்” நிறுவனத்தையும் உடுமலை திரு.ராதாகிருஷ்ணன் நடத்தி வருகிறார்” என்று இன்னொரு ஆதாரப் பூர்வமான குற்றச்சாட்டையும் துறை அமைச்சராக இருந்தவரே கூறியிருக்கிறார்.
"ஆட்சியில் உள்ளவர்கள் அதிகாரத்தை எப்படி துஷ்பிரயோகம் செய்து, லஞ்ச - ஊழல் செய்கிறார்கள் ” என்பதற்கு, அந்தக் கூட்டத்திலிருந்தே மேலும் ஒரு ஆதாரமாக வெளிவந்திருக்கிறது. அரசு கம்பி வடத் தொலைக்காட்சி நிறுவனமானது அமைச்சராக இருந்த திரு.மணிகண்டன் கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்தப் புகாரில் வலுவான ஆதாரம் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

2 லட்சம் தனியார் கேபிள் இணைப்புகளை வைத்துள்ள உடுமலை. ராதாகிருஷ்ணனையே அரசு கேபிள் நிறுவனத் தலைவராக அவசர அவசரமாக முதலமைச்சர் நியமித்தது ஏன்? 70 லட்சம் செட்டாப் பாக்ஸூகள் கொள்முதலில் அமைச்சராக இருந்தவருக்கும் முதல்வருக்குமிடையில் கொடுக்க-வாங்கலில் என்ன பனிப்போர்? திரு. மணிகண்டனின் குற்றச்சாட்டிற்கும், பதவி நீக்கத்துக்கும் என்ன தொடர்பு? இந்த கேள்விகளுக்கு எல்லாம் முதலமைச்சர் திரு.பழனிச்சாமி உடனடியாக வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டும்.
செட்டாப் பாக்ஸ் தயாரிப்பிலும் ஈடுபட்டு, தனியார் கேபிள் நிறுவனமும் நடத்தி வரும் உடுமலைப்பேட்டை திரு.ராதாகிருஷ்ணனை அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கி ஊழல் தடுப்புத்துறை மூலம் உரிய - விரிவான விசாரணைக்கு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும்.
-தளபதி மு.க.ஸ்டாலின்.

கருத்துகள் இல்லை: