ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் மெகபூபாவிற்கு லஞ்ச ஒழிப்பு துறை ஆணை .. பாஜகவின் பழிவாங்கல் ஆரம்பம்


தினமலர் : ஜம்மு: காஷ்மீரில் முதல்வர் பதவி வகித்த போது, காஷ்மீர் வங்கிக்கு, பணியாளர்கள் நியமிக்க அமைச்சர்கள் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தீர்களா இல்லையா என விளக்கம் அளிக்கும்படி, முன்னாள் முதல்வர் மெகபூபாவிற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.>
இது தொடர்பாக காஷ்மீர் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுப்பிய சம்மனில் கூறப்பட்டுள்ளதாவது: ஜம்மு காஷ்மீர் வங்கிக்கு, சில அமைச்சர்களின் பரிந்துரைப்படி நியமனங்கள் நடந்துள்ளன. இந்த பரிந்துரைக்கு வாய்மொழியாகவோ மற்ற முறைகளிலோ ஒப்புதல் அளித்தீர்களா என விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெகபூபா கூறுகையில், இந்த சம்மன் ஆச்சர்யம் அளிக்கவில்லை. முக்கிய அரசியல் தலைவர்களை துன்புறுத்துவதற்கும், அவர்கள் ஒன்றுசேர்வதை தடுக்கவும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. இன்று நாம் அனைவரும் ஒன்று சேர நான் சிறிய கருவிதான். இத்தகைய தந்திரங்கள் ஒன்றும் செய்யாது எனக்கூறியுள்ளார்.3 மாதங்களில் 2 லட்சம் பேர் வேலையிழப்பு

கருத்துகள் இல்லை: