திங்கள், 5 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் ..இந்திய முதலாளிகளின் கொள்ளைக்கு வழி வாய்ப்பு அளித்த இந்திய அரசு

Prakash JP : ஜம்மு &; காஷ்மீர் சட்டப்பிரிவு 370 &; 35A
கலாச்சார, மொழி & மத ரீதியில் வேறுபட்டுள்ள ஜம்மு, லடாக் மற்றும் காஷ்மீர் பகுதிகளை தனித் தனியே பிரிப்பது தவறல்ல.. அரசியல் ரீதியாகவும் இந்த மூன்று பகுதிகளும் வேறுபட்டுத்தான் உள்ளன.. ஆனால், இதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல், அப்பகுதியில் உள்ள மக்கள் &; கட்சிகளின் பங்களிப்போடு செய்யவேண்டும்.. அதுதான் ஜனநாயக பூர்வமானது..
அதே நேரத்தில், பிரிட்டிஷ் இந்தியாவின் அங்கமில்லாமல், மன்னர் ஹரிசிங் ஆட்சியின் கீழ் தனி நாடாக விளங்கிய ஜம்மு & காஷ்மீர் பகுதியை, இந்தியாவுடன் 1947 க்கு பின் இணைக்க முன்வந்தபோது, அம்மக்களுக்கு அப்போது இந்திய அரசால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளான, சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 &; 35A அரசியல் சாசன உரிமைகளை நீக்க முயல்வது தவறான ஒன்று.. அப்படி செய்தால், காஷ்மீர் இணைப்பு உடன்படிக்கை செல்லாமல் போகவும் வாய்ப்புண்டு. உச்சநீதிமன்றமும் ஏற்கனவே இந்த சட்ட பிரிவை நீக்கமுடியாது என தீர்ப்பு அளித்துள்ளது (The Supreme Court on Apr 4, 2018, said Article 370 of the Constitution, conferring special status on Jammu and Kashmir and limiting the Central government's power to make laws for the state, had acquired permanent status through years of existence, making its abrogation impossible.)
இப்படி நடந்தால், காஷ்மீர் விவகாரம் மீண்டும் ஐநா சபைவரை செல்ல வாய்ப்புண்டு.. 1947 இல் காஷ்மீர் விவகாரம் ஐநா சபைக்கு முதன்முதலாக சென்றபோது, இந்தியா & பாகிஸ்தான் நாடுகள் காஷ்மீர் பகுதியிலிருந்து வெளியேறி, ஐநா மேற்பார்வையில் அம்மக்களிடம், 1. இந்தியாவுடன் இணைவதா 2. பாகிஸ்தானுடன் இணைவதா 3. யாருடனும் இணையாமல் தனி நாடாக இருப்பதா, என்ற மூன்று வாய்ப்புகளை பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவுசெய்ய வேண்டும் என ஐநா சபை உத்தரவிட்டது..

ஆனால், அதை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்று நடைமுறைப் படுத்தவில்லை..
சட்டப்பிரிவு 35A, அம்மாநில குடிமக்கள் அல்லாதவர்கள், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் நிலம் போன்றவற்றை வாங்குவதை தடைசெய்கிறது. இந்த பிரிவை நீக்குவது, பெருமுதலாளிகளாக உள்ள மார்வாடி & குஜராத்திகள் பெருமளவில் அங்கே நிலம் போன்ற சொத்துக்களை வாங்கி குவிக்கவே வழிசெய்யும்.
அம்மாநில வளங்களை அதானி அம்பானி ஜிண்டால் வேதாந்தா போன்ற பெருமுதலாளிகள் சூறையாட வழிசெய்யும். எப்படி தமிழ் நாடு போன்ற மற்ற மாநிலங்களின் சிறு நகரம் முதல் பெரு நகரம் வரை எல்லா ஊர்களிலும் மார்வாடி & வட மாநில மக்கள் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனரோ, வீடுகள், கடை வணிக வளாகங்கள், விவசாய & தொழிற்சாலை இடங்கள் என வாங்கி குவிக்கின்றனரோ, அப்படியான நிலை ஜம்மு & காஷ்மீரிலும் உருவாகலாம்.. (தமிழ் நாடு போனற பிற மாநில மக்களும் மற்ற மாநிலங்ககளில் வீடுகள் வாங்குகிறார்கள், ஆனால் அவை பெரும்பாலும் அம்மாநில தலைநகரங்களில் மட்டுமே, அதுவும் மிஞ்சிப்போனால் வேலைநிமித்தம் குடியிருக்க 2BHK பிளாட்டுகள்.. மார்வாடி சேட்டுகளை போல குக்கிராமம் வரை சொத்துக்களை வாங்கி குவிப்பதில்லை)

கருத்துகள் இல்லை: