திங்கள், 5 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் ...370 விதி யாருக்கு தடையாக உள்ளது? கொள்ளைக்கார முதலாளிகளுக்கு?


Adv Manoj Liyonzon :; உறுத்தும் புல்வாமா மோங்க்ரா
தனித்துவமான நீலம், தட்டையாக, மிருதுவான நூல் வடிவில் அடர் சிவப்பு நிறம், அசாதாரண நறுமணம், சக்திவாய்ந்த வண்ணமயமாக்கல் மற்றும் சுவையூட்டும் திறன்களைக் கொண்டதால் மசாலா பொருட்கள் வகையில் மோங்ரா உலகின் மிகச் சிறந்த மசாலா பொருளாக விளங்குகிறது.
செயல்முறைக்கு முன்னர் காங் என்றும், செயல்முறைபடுத்தப்பட்டது மோங்க்ரா என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவிற்கு மட்டும் வருடத்திற்கு குறைந்தது 1.5 லட்சம் கிலோ மோங்க்ரா தேவைப்படுகிறது. ஆனால் தற்போது வருடத்திற்கு வெறும் 8000 கிலோ மோங்க்ரா மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
உற்பத்தி செலவு அதிகம் என்பதாலும், அரசியல் பொருளாதார காரணங்களுக்காக அரசிடமிருந்து போதிய உதவித் திட்டங்களும் ஒத்துழைப்பும் கிடைக்காததாலும், உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது. தரம்/அம்சங்கள் Quality/Features மற்றும் தேவை/வழங்கல் (Demand and supply) அடிப்படையில் மோங்க்ரா ஒரு கிலோ ₹. 2.5 லட்சம் முதல் ₹. 3 லட்சம் வரை விலை போகிறது என்பதால் உலக அளவில் மசாலா பொருட்களில் மோங்க்ரா தான் விலை உயர்ந்தது.

பல்லாயிரம் கோடிகள் ஈட்டக்கூடிய வாய்ப்பு கொண்ட மோங்க்ரா விவசாயம் தற்போது வெறும் ₹.200 கோடிகள் மட்டுமே ஈட்டுகிறது. அதற்கு காரணம் மோங்க்ரா விவசாயம் இஸ்லாமியர்கள் கையில் இருப்பதால்.
ஆம்… மோங்க்ரா விவசாயிகள் அனைவரும் இஸ்லாமியர்கள்.
இதை படிக்கும் நீங்கள் இப்போது புரிந்து கொள்வீர்கள் ஏன் மோங்க்ரா விவசாயத்தின் மீதான அரசியலை.
பல்லாயிரம் கோடிகள் ஈட்டும் வாய்ப்புள்ள மோங்க்ரா விவசாய நிலங்கள் இந்திய அரசியலமைப்பு சாசனம் கட்டுரை 370 வழங்கியிருக்கும் சிறப்பு நிலையின் கீழ் வருகிறது.
மோங்க்ரா விவசாயத்தில் பல்லாயிரம் கோடிகள் ஈட்டக்கூடிய வாய்ப்புள்ளதாலும், மோங்க்ரா விவசாய நிலங்கள் இஸ்லாமியர்கள் கையில் இருப்பதும் பெரும் உறுத்தலாக இருக்கிறது.
மோங்க்ரா விவசாயத்தை கைப்பற்ற வேண்டுமானால், அந்த விவசாய நிலங்களை கைப்பற்ற வேண்டும். அதற்கு இந்திய அரசியலமைப்பு சாசனம் கட்டுரை 370 பெரும் தடையாக உள்ளது.
ஆம். மோங்க்ரா காஷ்மீரில் தான் விளைவிக்கப்படுகிறது. மோங்க்ரா விவசாய நிலங்கள் காஷ்மீரில் தான் உள்ளது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமேயானால் மோங்க்ரா சந்தையும் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கலாம்.
மோங்க்ரா என்பது வேறொன்றுமல்ல, அது காஷ்மீர் குங்குமப்பூவின் பெயர்.
ஆம். மோங்க்ரா எனும் உலகின் உயர்தர குங்குமப்பூ காஷ்மீரில் தான் விளைவிக்கப்படுகிறது.
குறிப்பு:- புல்வாமா நினைவிருக்கிறதா!?
சமீபத்தில் இந்திய ராணுவத்தினர் தாக்குதலுக்கு உள்ளான பகுதி புல்வாமா. அந்த புல்வாமாவை சுற்றியுள்ள பகுதிகள் தான் மோங்க்ரா எனும் உலகின் தரம்வாய்ந்த குங்குமப்பூ விளையும் விவசாய நிலங்கள் கொண்ட பகுதியாகும்.
Game Started

கருத்துகள் இல்லை: