ஞாயிறு, 27 மே, 2018

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு 20 லட்சம் இழப்பீடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கான இழப்பீடு தொகை ரூ.20 லட்சமாக உயர்வுமாலைமலர் :தூத்துக்குடி  துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு  ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொகையை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமாறு ஐகோர்ட் மதுரை கிளை அரசுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், இழப்பீடு தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: