சனி, 1 டிசம்பர், 2018

அரசியல்வாதிக்கு கூழைக்கும்பிடுபோடும் ஒரு அரசு அதிகாரி .. சாமியாடும் நேர்மை குஞ்சுகள்

LR Jagadheesan : இப்படித்தான் சகாயம் என்று உலகத்திலேயே ஒரே உத்தமர்
தான் கிரானைட் முறைகேட்டை கண்டுபிடித்து தண்டிக்கக்கூடிய ஒரே ஆள் என்று சாமியாடினார்கள். நீதிமன்றமும் சேர்ந்து ஆடியது. சகாயமும் தன்பங்குக்கு நட்டநடுராத்திரியில் சுடு காட்டுக்கெல்லாம் போய் photoவுக்கு pose எல்லாம் கொடுத்தார்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய இயற்கை வளக்கொள்ளைகளில் ஒன்றான கிரானைட் கொள்ளை வழக்கு என்ன ஆனது?
எத்தனைபேர் தண்டிக்கப்பட்டனர் என்று யாராவது பட்டியலிட்டால் தேவலாம்.
சகாயம் ஃபார் சி எம் என்கிற கோஷத்தை வைத்து அலுத்துப்போனவர்கள் இப்போது இவரை வைத்து சாமியாடிக்கொண்டிருக்கிறார்கள்.
மாநில அரசியலில் இருப்பதிலேயே கேடுகெட்ட அரசியல்வாதிக்கு கூழைக்கும்பிடுபோடும் ஒரு அரசு அதிகாரி தான் உங்களின் நேர்மைக்கான இலக்கணம் என்றால் உங்கள் நேர்மையை கொண்டுபோய் அந்த கூவத்தில் கொட்டுங்கள்.

கருத்துகள் இல்லை: