வியாழன், 29 நவம்பர், 2018

கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு சோனியா உட்பட அனைத்து மத்திய மாநில எதிர்கட்சிகளையும்..

கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி சென்னை வருகிறார் - திமுகஅண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கலைஞர்  சிலை திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னைக்கு வருகிறார் என திமுக தெரிவித்துள்ளது. சென்னை: கடந்த ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்த கலைஞருக்கு  தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிரமாண்டமான முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. கலைஞர்  சிலையுடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவுக்கும் புதிய சிலை அமைக்கப்பட உள்ளது.
மேலும் மிக பிரமாண்டமான தி.மு.க. கொடி கம்பம் ஒன்றும் அங்கு நிறுவப்பட உள்ளது.
 பேரறிஞர் அண்ணா-  கலைஞர்  ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா டிசம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
பாஜகவுக்கு எதிராக உள்ள காங்கிரஸ் மற்றும் அனைத்து மாநில கட்சிகளையும் கலைஞர்  சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பதற்கு மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் தி.மு.க. மூத்த தலைவர்களை பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.


இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கலைஞர்  சிலை திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னைக்கு வருகிறார் என திமுக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கலைஞர்  சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
அவரது அழைப்பை ஏற்று சிலை திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உறுதி செய்துள்ளார்.

 இதையடுத்து, டிசம்பர் 16-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கலைஞர்  சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வருகிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாலைமலர்

கருத்துகள் இல்லை: