வியாழன், 19 ஏப்ரல், 2018

நீதிபதி லோயா கொலை வழக்கு தீர்ப்புக்கு முன்பாகவே பாஜக அமைச்சர் கைக்கு எப்படி வந்தது ?


Shankar A :இன்று நீதிபதி லோயாவின் மரணம் குறித்து பிரத்யேக விசாரணை அமைக்க வேண்டும் என்று கோரிய பொது நல வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், பொது நல வழக்குகள், அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதை கடுமையாக கண்டிக்கிறோம். இது தடுக்கப்பட வேண்டும் என்று கூறினர். மேலும் சில கடுமையான வார்த்தை பிரயோகங்கள் உள்ளன.
சமீப காலங்களில் உச்சநீதிமன்றம் விசாரித்து, விரிவான தீர்ப்பு வழங்கிய சில பொது நல வழக்குகள்
1) கோகினூர் வைரத்தை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்.
2) திரைப்படங்கள் திரையிடுவதற்கு முன் தேசிய கீதம் இசைக்க வேண்டும்.
3) சான்டா பான்டா ஜோக்குகளை தடை செய்ய வேண்டும்.
4) நீலப்படங்கள் பார்ப்பதை தடை செய்ய வேண்டும்.
5) யோகாசனம் செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.
இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த அமர்வில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளார் என்பதையும் கூறிக் கொண்டு…..

கருத்துகள் இல்லை: