திங்கள், 23 ஜனவரி, 2017

மெரீனாவில் போராடும் இளைஞர்களுக்கு பாதுகாப்பு அரணாக நொச்சிக்குப்பம் மீனவர்கள்

நந்தன் ஸ்ரீதரன் r · கொடும் வெயிலில் மாணவர்கள் தன்னந்தனியாக மெரீனா கடலருகில் போராடுகிறார்களே என்று பதறிக் கொண்டிருந்தேன்.. இரண்டு மானுடபூர்வமான விஷயங்கள் நடந்திருக்கின்றன.. ஒன்று பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம், அயோத்தியா குப்பம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் மீனவ மக்கள் புறப்பட்டு மாணவர்களுக்கு பெரும் ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். மீனவப் பெண்கள் மாணவர்களுக்கு அரணாக நிற்கிறார்கள்.. அதே போல கடும் வெயிலில் தண்ணீரின்றி வாடும் மாணவச் செல்வங்களுக்கு போலீசார் தண்ணீர் கொண்டு செல்ல மறுக்கிறார்கள். அவர்களின் தடையை மீறி நொச்சிக்குப்பம் பகுதியிலிருந்து மீனவர்கள் படகு மூலம் தண்ணீரும் பிஸ்கட்டுகளும் கொண்டு வந்து மாணவர்களின் பசியையும் தாகத்தையும் போக்கி வருகிறார்கள். அடக்க அடக்க முளைக்கும் தீரத்தோடு முன்னே செல்கிறது எம் தமிழ் மக்களின் போராட்டம்...  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: