வியாழன், 2 ஜூன், 2016

ஜெயலலிதா ஒரு கோழை... எல்லா சர்வாதிகாரிகளும் வீரவேஷம் போடும் கோழைகள்தான்!

வரலாற்றுக் கரும்புள்ளி..
ஜெயாவை துணிச்சல் மிக்கவர்..போல்ட் லேடி என்று கூவி.. சில அரைவேக்காடுகள் துள்ளி குதிக்கும்
உண்மையில் ஜெயா ஒரு படு கோழை.
ஆதாரங்களை அடுக்குகிறேன் சிந்தித்துப் பாருங்கள்.
1...எம்ஜிஆர் கூட இருந்த அத்தனைப்பேரையும் ஏன் துரத்தினார்...பயம் பயம்..அவர்கள் வளர்ந்து தன்னை ஒழித்துவிடுவார்கள் என்ற அந்த பயம்
2...இப்போதுள்ள கட்சிக்காரர்கள் அமைச்சர்களை ஏன்
..வாய்ப்பூட்டு போட்டு ...குனியவைத்து....காலில் விழவைத்து மிதித்து வைத்திருக்கிறார் ?...பயம்..பயம்...இவர்களில் எவனாவது நம்மை ஏதாவது பண்ணிடுவானோ என்ற பயம்...
3. ஊடகங்களை ஏன் விலைக்கு வாங்கி பொய் உற்பத்திச் சாலைகளாகவும் பஜனை மடங்களாகவும் வைத்திருக்கிறார் ??? பயம்..
ஊடகங்களை சுதந்தரமாக விட்டால் தன சாயம் வெளுத்துவிடும் என்ற பயம்.
4....உலகம் சிரிக்குமே என்ற கூச்சமே இல்லாமல் பொய்களையே சொல்லி வருவது ஏன்.? உண்மையை சந்திக்க பயம் ..உண்மை பேச பயம்..

5 மத்திய அரசையும்...தேர்தல் ஆணையத்தையும்...சிபிஐ..வருமானவரித்துறை ...ஐ எ எஸ் அதிகாரிகளையும்...காவல்துறையையும் நீதிபதிகளையும் எல்லாரையும் விலைகொடுத்து வாங்குவது எதனால் ?...பயம்...
தன் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தனக்கு தண்டனை கிடைக்காமல் தப்பவேண்டுமே என்ற பயம்...
6. மலையாள மந்திரவாதிகள் ஜோதிடர்கள் யாரயாரையோ அழைத்து ஹோமங்கள்...யாகங்கள் பரிகார பூசைகள் .பண்ணுகிறாரே அது ஏன் ஏன் ????....பயம்...தனக்கும் தன் அரசியல் வாழக்கைக்கும் சேதாரம் வந்துவிடுமோ என்ற பயம் ஒவ்வொரு நொடியும் பயத்தில் நடுங்குகிறார் ஜெயா...
மக்களிடம் பயம் ..தன் சொந்த கட்சிக்கார்களிடம் பயம்...அதிகாரிகளிடம் பயம் ..ஊடகங்களிடம் பயம்..சட்டம் நீதியை பார்த்து பயம்...தன் முகத்தைப்பார்த்து கூட பயம்.....
இப்படிப்பட்ட ஜெயாவை...சில வெட்கம் கெட்ட மூடர்கள் மிகப்பெரிய துணிச்சல்காரர்...திறமைசாலி என்று சொல்லித் திரிகிறார்கள் ..
சர்வாதிகாரிகள் எல்லோரும் படுகோழைகளே ! அதை மறைக்கவே அவர்கள் ..மற்றவர்களை அச்சுறுத்தி கொடுமை செய்வார்கள்...அந்த வகை தான் இந்த ஜெயலலிதாவும்...
எல்லா சர்வாதிகாரிகளுக்கும் நேர்ந்த இழிவுதான்
ஜெயாவையும் வந்து சேரும்...விரைவில்....
எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டல்லவா !
Damodaran Chennai  facebook

கருத்துகள் இல்லை: