ஞாயிறு, 29 மே, 2016

தவறான பாதைக்கு நாட்டை அழைத்து செல்ல மாட்டேன்: பிரதமர் உறுதி

 நாட்டை ஒரு போதும் தவறான பாதைக்கு அழைத்து செல்ல மாட்டேன் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.>கர்நாடக மாநிலம் தவங்கரே என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சி பற்றி உங்களிடம் பேச எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏசி அறையில் அமர்ந்து கொண்டு ஏராளமான மக்கள் வெயிலில் ஏன் அவதிப்படுகின்றனர் என யோசித்தால் முடிவு எதுவும் வராது. நாங்கள் பதவியேற்ற சில நாளில், அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என எங்களை சிலர் கூறினர். இதற்கு காரணம், நாட்டில் சிலர் ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர்.   மோடி என்ன பேசினாலும் எப்படி நடித்தாலும் நிச்சயம் அடுத்த தடவை பிரதமர் ஆக முடியாது. இவர் இந்தியா முழுவதிலும் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தவர் அல்ல. குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே பெரிய அளவில் பெற்று ஆட்சிக்கு வந்தவர். அந்த மாநிலங்களில் இனி பெரிய வெற்றி பெறமுடியாது. அதற்கு பீகார் சான்று. அடுத்த வரப்போகிற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வால் முன்பு போல வெல்லமுடியாது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மோடியின் பேச்சு இனி எடுபடாது. 2 வருடத்தில் எதையுமே உருப்படியாக செய்யாமல் கார்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவே எல்லாவற்றையும் செய்துகொண்டு பேசுகிற பேச்சை பாரு. இவருக்கு மக்கள் நலன் என்றெல்லாம் எதுவும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. காங்கிரஸ் இல்லாத இந்தியா அதுவே ஆர்.எஸ்.எஸ். நோக்கம் என்று செயல்பட்டு கொண்டு இருக்கிறார். நாட்டின் ஒற்றுமையை காக்க பாடுபடும் காங்கிரசை அவ்வளவு சீக்கிரத்தில் அழிக்க முடியாது. பல விவகாரங்களில் காங்கிரஸ் பிடிக்காது. ஆனால் தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாடு சகோதரத்துவம் மதசார்பற்ற தன்மை ஆகியவை நிலைத்து இருக்க காங்கிரஸ் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதால் அதன் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.

ஆனால், அவர்கள் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்க மறுப்பதேயாகும். இன்று உங்களால் ஒரு ரூபாய்க்கு டீ வாங்க முடியாது. நான் டீ விற்ற போது வாங்க முடியும். ஆனால், இன்று 1 ரூபாய்க்கு, மக்கள் காப்பீடு பெற்றுள்ளனர். இதனால் பலர் பயன்பெற்றுள்ளனர். தூய்மை இந்தியா திட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இது பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை வழங்கும் போது, அவர்கள் மண்ணிலிருந்து தங்கத்தை அறுவடை செய்வார்கள். வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களை சந்தித்துள்ளேன். அவர்களிடம் வறட்சியை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனக்கூறியுள்ளேன். நம் நாட்டு மக்கள் தேவையில்லாத பல சட்டங்களால் கடும் துன்பப்படுகின்றனர். அதுபோன்ற 1200 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. இடைத்தரகர்கள் இல்லாத அரசை நாங்கள் உருவாக்கியுள்ளோம். நான் எந்த பாவமும் செய்துள்ளேனா? தவறான பாதையில் சென்றுள்ளேனா? உங்களை போன்ற ஏராளமான மக்கள் என் மீது அன்பு வைத்துள்ளனர். இதனால், தவறான பாதையில் செல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நாட்டை தவறான பாதைக்கு அழைத்து செல்ல மாட்டேன் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் எனக்கூறினார்.  தினமலர்.கம

கருத்துகள் இல்லை: