திங்கள், 30 மே, 2016

மனைவியை வைத்து சூதாடி இழந்த நபர்..ஐ.பி.எல். பெட்டிங்கில் ...உபியில்


உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் கோவிந்த்நகர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்தர் சிங். இவரது மனைவி ஜஸ்மீத் கவுர். இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.திருமணம் முடிந்த முதல் நாளிலேயே மனைவியின் நகைகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை தன்னிடம் தரும்படி கேட்டுள்ளார். அதன்பின் ரவீந்தர் குடிகாரர் மற்றும் சூதாடுபவர் என்பது மனைவி கவுருக்கு மெல்ல தெரிய வந்துள்ளது.விலையுயர்ந்த பொருட்களை வைத்து ரவீந்தர் சூதாடி இழந்துள்ளார். ஐ.பி.எல். சூதாட்டம் நடந்தபொழுது தனது வீட்டை விற்பதற்கும் அவர் திட்டமிட்டு இருந்துள்ளார்.

தனது பணம் முழுவதையும் பங்கு சந்தையில் இழந்ததை அடுத்து ஐ.பி.எல். பெட்டிங்கில் தனது மனைவியை வைத்து சூதாடி அதிலும் தோற்று போனார்.
இதனை அடுத்து அவருடன் சூதாடியவர்கள் அவரது மனைவி கவுரை துன்புறுத்த தொடங்கியுள்ளனர்.  சமூக ஆர்வலர்கள் துணையுடன் போலீசாரை அணுகிய கவுர் உதவி கேட்டுள்ளார். இது பற்றி போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.  nakkeeran.in

கருத்துகள் இல்லை: