வியாழன், 2 ஜூன், 2016

சொத்துக்கள் குவிப்பது குற்றமல்ல : ஜெ., வழக்கில் மனுநீதி / சுப்ரீம் கோர்ட் கருத்து

சூத்திர ஜாதிகளால் வணங்கப்படும்  ஒரு பாப்பாத்தியை தண்டிக்க அவாளுக்கு ஏன்னா பைத்தியமான்னோ? புதுடில்லி:'வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்ப்பது குற்றமல்ல; சொத்துக்கள், சட்டப்பூர்வமான வருமானத்தில் வாங்கப்படவில்லை என, அரசுத்தரப்பு நிரூபிக்க முடியும் என்றால் மட்டுமே, அது குற்றமாகிறது' என, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையின் போது, சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தது. சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேரை விடுதலை செய்து, கர்நாடகா ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள், பினாகி சந்திரகோஷ், அமிதவ் ராய் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.அப்போது, கர்நாடகா அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, ''ஜெயலலிதா உட்பட நான்கு பேரை விடுதலை செய்து, கர்நாடகா ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் ,விசாரணை நீதிமன்றம் வழங்கிய நான்கு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்ய வேண்டும்,'' என, வாதிட்டார். பேசாம பார்பனர்கள் என்ன செய்தாலும் குற்றம் இல்லை என்ற மனுநீதியை குற்றவியல் சட்டமாக்கி விட்டால் நேரம் செலவு எல்லாம் மிச்சம்

கர்நாடகா அரசுத் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே வாதிட்டதாவது:ஆதாரங்களை முறையாக பரிசீலிக்காமல்,கர்நாடகா ஐகோர்ட் அளித்த தீர்ப்பு, தவறானது. 2015, மே, 11ல், கர்நாடகா ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் அல்லது, வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். விசாரணை நீதிமன்ற சாட்சியங்களை மறுஆய்வு செய்ய முடியாது. ஐகோர்ட் தீர்ப்பு சரியா, இல்லையா என்று மட்டுமே சுப்ரீம் கோர்ட் ஆய்வு செய்ய முடியும்

தப்பிவிடலாம்:; விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றுவதற்கு உரிய காரணங்களை ஐகோர்ட் நீதிபதி குறிப்பிடவில்லை. ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்யாவிட்டால், ஊழலை ஒழிக்க கொண்டு வரப்பட்ட லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் நோக்கமே பயனற்றதாகி விடும். அதேபோல, ஊழல் வழக்கில் இருந்து தப்பி விடலாம் என்றதவறான சமிக்கையை, அரசு ஊழியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அளித்துவிடும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது:எங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, ஜெயலலிதாவை விடுதலை செய்து ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்யலாம்; இரண்டு, அந்த தீர்ப்பை ரத்து செய்து, தண்டனையை உறுதி செய்யலாம்; வழக்கை மீண்டும் ஐகோர்ட்டுக்கு திருப்பி அனுப்புவது அல்லது விசாரணை நீதிமன்ற தீர்ப்பு தவறு என தெரிய வந்தால், அந்த தீர்ப்பை ரத்து செய்து, மறு விசாரணைக்கு உத்தரவிடலாம்.

வாதங்கள் நிறைவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்ப்பது குற்றமல்ல; சொத்துக்கள் சட்டப்பூர்வமான வருமானத்தில் வாங்கப்படவில்லை என, அரசுத்தரப்பு நிரூபிக்க முடியும் என்றால் மட்டுமே, அது குற்றமாகிறது.இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நான்கு பேர் தரப்பு வாதங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. இதையடுத்து, வழக்கின் விசாரணையை, நீதிபதிகள், ஜூன் 7க்கு தள்ளிவைத்தனர்.

கருத்துகள் இல்லை: