செவ்வாய், 31 மே, 2016

திட்டமிட்டு தமிழகத்தை வஞ்சிக்கும் ஆரியம், ஆந்திரம், கன்னடம், மலையாளம் ... புரிந்துகொள்வார்களா?

ஒரு நாட்டையோ ...ஒரு இனத்தையோ அடியோடு அழிக்க
ஒரு எளிய வழி உண்டு.
!...அந்த மக்களுக்கு கல்வி கிடைக்க விடக்கூடாது.அந்த இனத்தை கல்வி கற்க விடமால் தடுக்கவேண்டும். அவர்களை நல்லது கெட்டது சிந்திக்க விடக்கூடாது
2. அந்த மக்களுக்கு வயிறு காய விட வேண்டும் ...அவர்களுக்கு உணவு கிடைக்கக் கூடாது...அவர்களது...விவசாயம்...செய் தொழில்களை அழித்தால் வருவாய் இல்லாமல் பட்டினி கிடக்க நேரிடும்... வயிற்றில் அடித்தால்.....அந்த இனம் தன்னால் அடிமைப் பட்டுவிடும்
இந்த இரண்டு வேலையை செய்தாலே போதும் ......ஒரு இனத்தை அடியோடு அழித்து விடலாம்.
சரி...இப்போது...தமிழ்நாட்டில் ...ஜெயாவின் ஆட்ச்சியை உற்றுப்பாருங்கள் உண்மை புரியும்.
சமச்சீர் கல்வி ...தமிழ் வழி கல்விக்கு பதில் ...அரசு பள்ளிகளை மெல்ல மெல்ல பாழ் படுத்தி...தனியார் ஆங்கில வழி கல்வி கொண்டுவருவது மூலமாக தமிழக ஏழை எளிய மக்களுக்கு கல்வியை எட்டாக்கனி யாக்கி...அவர்களை கூலிக்காரர்களாகவே...அடிமைகளாகவே வைத்திருப்பது ஆட்சியின் நோக்கம் என்று புரிகிறதா ?//
அண்ணா நூற்றாண்டு விழா நூலகம் மற்றும் செம்மொழி நூலக அழிப்பு வேலைகள் எல்லாம் எதற்காக என்று புரிகிறதா ஏமாளிகளே ?
அடுத்தது...........

காவேரி...முல்லைப்பெரியார் சிக்கல்களை வேண்டுமென்றே ஊதி பெரிதாக்கி 5 வருடமாக தண்ணி இல்லாமல் விவசாயம் செய்தது மட்டுமல்ல...அதன் துணை தொழில்களும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன.
பெருந்தொழில்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியே துரத்திக்கொண்டு இருக்கிறது வேலைவாய்ப்புகளை அழித்துக்கொண்டு இருக்கின்றன.
தமிழ் மக்களை பிச்சைக்காரர்களாக்கிக் கொண்டிருக்கிறது.
ஏழை மக்களுக்கு இலவசங்களை கொடுத்து நிரந்தர கொத்தடிமைகளாக மாற்றிக்கொடிருக்கிறது.
ஆரியப்படை சரியான பாதையில் ஒற்றுமையாக செயல்பட்டு ...தமிழர்களை நடைப்பிணங்களாக்கி....தமிழகத்தை சுடுகாடாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
ஏமாளித் தமிழர்கள் இதை எப்போது புரிந்து கொள்வார்களோ ?????
Damodaran Chennai

கருத்துகள் இல்லை: