செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

தலைவாவுக்கு பாலபிஷேகம் ! ஜெயலலிதா செய்ததே சரி !

நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் திருட்டு சி.டி வெளிவந்துவிட்டது. இந்த சி.டியை ரசிகர்களே பல இடங்களில் பிடித்து கொடுத்தனர். இந்த நிலையில் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து இன்று செவ்வாய் கிழமை தலைவா திரைப்படம்    தமிழ கத்தில் திரைக்கு வந்தது. புதுக்கோட்டையில் திரையரங்கம் முன்பு திரன்ட ரசிகர்கள் மாவட்ட அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜாபர் அலி தலைமையில் ஆடு வெட்டி, மொட்டை போட்டு விஜய் படத்திற்கு பாலா பிஷேகம் செய்தனர்  அப்போது அவர்கள் கூறும் போது தலைவா படம் தமிழகத்தில் நீண்ட நாட்கள் ஓட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த செய்கைகள் என்றனர். இந்த கண்றாவிகளை விலாவாரியாக பார்க்கவேண்டும் என்றால் கீழ்காணும் படங்களை பாருங்க , ஜெயலலிதா செய்தது சரிபோல் தெரிகிறது.சினிமாகாரனுக்கு பின்னால் போகும் சமுகம்
உருப்படாது

              - இரா.பகத்சிங்

கருத்துகள் இல்லை: