ஞாயிறு, 23 ஜூன், 2013

பெப்சி உமாவுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தாராம் ஜெயா டிவி சரவணராஜன்

"பெப்சி உங்கள் சாய்ஸ்" தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பெப்சி உமா, தற்போது அவர் ஒரு தனியார் தொலைக்காட்சியென்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகியாக கடமையாற்றிய சரவணராஜன், பெப்சி உமாவுக்கு அடிக்கடி செக்ஸ் தொந்தரவு செய்துவந்ததுடன், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் நிகழ்ச்சி தொகுப்பில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டினார். சரவணராஜனின் தொல்லைகள் அதிகமானதால் இதுபற்றி பெப்சி உமா மகளிர் பொலிசில் முறைப்பாடு செய்தார். இதனையடுத்து தொலைக் காட்சி தயாரிப்பு நிர்வாகியான சரவணராஜனை நேற்றிரவு கைது செய்த பொலீசார், அவர் மீது "வன் கொடுமை" சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சைதாப்பேட்டை நிதிமன்றத்தில் ஆஜர்படுத்ததியதாகவும், அதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கைதான சரவணராஜன் திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: