ஞாயிறு, 23 ஜூன், 2013

கோத்ரா கலவரத்தை மறக்கவேண்டுமாம் ! BJP ராஜ்நாத் சிங் அட்வைஸ்

கோத்ரா கலவரத்தை தவிர்க்க முஸ்லிம்களுக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது கோத்ரா கலவரம் குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது:- 2002 ஆண்டு குஜராத் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு நாட்டில் 13,000 மதக்கலவரங்கள் நடந்து இருக்கின்றன. ஆனால் அவைகளை நாம் மறந்து தான் இருக்கிறோம். ராஜஸ்தானில் பாரதீய ஜனதாவின் பைரோன் சிங் ஷெகாவாத், வசுந்தர ராஜே சிந்தியா ஆகியோர் ஆட்சியில், மைனாரிட்டிக்கு எதிராக எந்த பாகுபாடுகளும் நடந்து இருக்கவில்லை. எங்களுடைய வார்த்தைகளிலும் செயல்களிலும் எந்த வேறுபாடும் இல்லையென்கிற நம்பிக்கையை உங்களுக்கு ஊட்டவே நான் விரும்புகிறேன். பிரிட்டிஷ் ஆட்சியில் பிரித்து ஆளும் கொள்கையை கடைபிடித்தனர். ஆனால் சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் அகியும் இன்னும் இந்து முஸ்லிம்களுக்கிடையே உள்ள அந்த இடைவெளியை நாம் சரிசெய்யவில்லை.


பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் மதத்திற்கு எதிராக எதேனும் பாரபட்சம் இருக்குமானால் என்னை அணுக மக்களை கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல் எனக்கு எழுதுங்கள். நான் பதில் தருகிறேன். அந்த பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கிறேன்.

நாட்டையும், சமுதாயத்தையும் அறிவுள்ளதாக மாற்ற வேண்டியது இப்போது மிக மிக முக்கியம். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் கட்சிகள் உண்மையான அரசியல் செய்துகொண்டிருக்கவில்லை. அன்பால், பாசத்தால் முஸ்லிம்களான உங்கள் மனதில் இடம் பிடிக்கவே நாங்கள் முயன்றுகொண்டிருக்கிறோம். பயத்தால் அல்ல.

உங்களிடத்தில் நம்பிக்கையை வளர்க்கவே நாங்கள் விரும்புகிறோம். எனவே கோத்ரா கலவரத்தை தவிர்க்க உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: