திங்கள், 7 நவம்பர், 2011

யாழ் அரச ஊழியர்களுக்கு வீடு

மாதம் 25,000 ரூபாவுக்குட்பட்ட வருமானம் பெறும் அரச ஊழியர்களுக்கு அரசின் வீட்டுத்திட்டம் வழங்குவதற்கான புதிய திட்டமொன்றை அரசாங்கம் அமுல்ப்படுத்தியுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் மூலமாக வருங்காலங்களில் முன்னுரிமை அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் வீட்டு வசதி செய்து கொடுக்கப்பட வேண்டிய 60,500 குடும்பங்களின் தேவையைப் பூர்த்தி செய்ததன் பின்னர் இவர்களுக்கான அரச வீடு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பி்ட்டார்.
இதுவரை சுமார் 27,000 குடும்பங்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்கவே ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், கொடுப்பனவு மற்றும் பிரயாணப்படி அடங்கலாக 25,000 ரூபாவிற்கு உட்பட்ட வருமானம் பெறும் அரச ஊழியர்கள் இந்தத் திட்டத்திற்குள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: