புதன், 9 நவம்பர், 2011

ஜெயலலிதாவிடம் இன்னும் 775 கேள்விகள் கேட்கப்பட வேண்டும்: வழக்கறிஞர்


சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக வரும் 22.11.2011 அன்று ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் அதற்கு மறுநாளும் விசாரணை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
வருவாய்க்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்குள் குவித்தது தொடர்பான வழக்கில், விசாணைக்கு 08.11.2011 அன்று மீண்டும் விசாணைக்கு ஆஜராக வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தவிர்ப்பதற்காக ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த வழக்கில் ஜெயலலிதா ஆஜராகவில்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மட்டு:ம ஆஜரானார்கள். ஜெயலலிதா தரப்பில் நீதிமன்றத்தில் வேறு தேதியில் ஆஜராக அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதா வரும் 22ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
தேவைப்பட்டால் அதற்கு மறுநாளும் விசாரணை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் ஆஜரானார்கள். அவர்களிடம் கேள்வி கேட்கப்படவில்ரலை. ஜெயலலிதாவிடம் கேள்விகள் முடிந்த பின்னரே அவர்களிடம் கேட்கப்படும். ஜெயலலிதாவிடம் இன்னும் 775 கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: