சனி, 6 ஆகஸ்ட், 2011

உள்பாவாடை காணாமல் போய்விட்டால் கூட எங்கள் மீது கேஸ் போடுகிறான் : கே.என்.நேரு பேச்சு


திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கலைவாணன் கைதை கண்டித்து திருவாரூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.; திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார்.
அவர்,’அதிமுக அரசு போடப்படுகின்ற வழக்குகளில் முதன் முதலில் ஆரம்பித்தது திருச்சியில்தான்.நீதிமன்றங்களில் தீர்ப்பு உங்களுக்கு எதிராகவும், எங்களுக்கு சாதகமாகவும் வரும் காலம் வரும்.

சினிமாவில்,’உள்பாவாடை காணாமல் போய்விட்டால் கூட எங்கள் மீது கேஸ் போடுகிறான்’’ என்று சொல்லுவான். அது மாதிரி நீங்கள் உண்மை நிரூபிக்கப்படாமல் யார் மீதும் அபாண்டமாக குற்றம் சுமத்தி வழக்கு போடுகிறார்கள்.
அதனால்தான், இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா? இதுதான் வேலையா? என்று மக்கள் கேட்கிறார்கள்.
திமுக அரசை நசுக்க பார்க்கிறீர்கள்.& எவ்வளவுக்கு எவ்வளவு எங்களை நசுக்குகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு பந்து போல எழுந்திருப்பான் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவன்’’ என்று பேசினார்.

கருத்துகள் இல்லை: