வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

என் கணவர் பல பெண்களை ஏமாற்றி கற்பழித்தவர்: தயாரிப்பாளர் மனைவி புகார்

தனது கணவன் பல பெண்களை ஏமாற்றி கற்பழித்துள்ளதாக திரைப்பட தயாரிப்பாளர் கோபாலின் மனைவி போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்தவர் கோபால். தகப்பன்சாமி, உச்சக்கட்டம் ஆகிய படங்களைத் தயாரித்தவர். அவரது மனைவி ராதிகா. அவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

இந்நிலையில் இன்று ராதிகா திருச்சி கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கமிஷனர் மாசானமுத்துவை சந்தித்து தனது கணவன் கோபால் மீது புகார் ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் தனது கணவன் பல பெண்களை ஏமாற்றி கற்பழித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு உச்சக்கட்டம் படபிடிப்பின்போதே கோபால் தினமும் குடித்துவிட்டு வந்து நடிகைகளை இம்சிக்கிறார் என்று கிடைத்த புகாரின்பேரில் இயக்குனர் சங்கம் அவரைக் கண்டித்தது என்பது குறிப்பிடத்தகக்து.

கருத்துகள் இல்லை: