சனி, 6 ஆகஸ்ட், 2011

பெற்ற தாயை கொலை செய்த மகன்: மட்டக்களப்பில் சம்பவம் _

இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வந்த ஒருவர் தன் தாயை அடித்துக் கொலை செய்த சம்பவமொன்று இன்று அதிகாலையளவில், மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப்பற்று பிரதேச செயலக கிரான்குளத்தில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது குறித்த சந்தேக நபர் மது போதையில் இருந்ததாகவும், தற்போது அவர் தப்பியோடியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் சந்தேக நபரை தேடி வருவதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: