வியாழன், 4 ஆகஸ்ட், 2011

மாணவியுடன் உல்லாசம்: உதவி கல்வி பணிப்பாளர் கைது

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் 20 வயது மாணவியுடன் உல்லாசமாக இருந்த மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 55 வயதுடைய உதவிக்கல்விப் பணிப்பாளர் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அடிக்கடி இவ்விடுதிக்கு வெ;வவேறு பெண்களுடன் வரும் மேற்படி உதவிக் கல்விப்பணிப்பாளர் தொடர்பாக பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி உதவிகல்விப் பணிப்பாளர் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்காவின் உத்தரவின் பேரில் விஷேட விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

கருத்துகள் இல்லை: