வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

இந்திய ஊடகங்களின் பொய் பித்தலாட்டம் சங்கிலியன் வாளை காணவில்லையாம்

தட்ஸ்தமிழ் என்ற இணையம் அடுக்கி இருக்கும் புழுகு மூட்டையை வாசியுங்க.
யாழ்ப்பாணம்: இலங்கையை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னரான சங்கிலியனின் சிலையில் இருந்த வீரவாளை அகற்றியுள்ளது இலங்கை அரசு.

இலங்கையை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னரான சங்கிலியனின் சிலை யாழ்ப்பாணத்தில் நல்லூர் முத்திரைச் சந்திப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. வீரவாளை உயர்த்தி பிடித்தப்படி சங்கிலியன் குதிரையில் பாய்ந்து செல்வது போன்று அந்த சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.

இறுதிக்கட்டப் போருக்கு பிறகு தமிழர்கள் வாழும் வடக்கு, மற்றும் கிழக்கு பகுதிகள் சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இதையடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள மன்னர் சங்கிலியன் சிலை அகற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து தற்போது அந்த சிலையை அதே இடத்தில் வைத்துள்ளனர்.

இதை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

ஆனால், சங்கிலியனின் சிலையின் வலது கையில் விண்ணை நோக்கி உயர்த்தி பிடித்து இருந்த வீரவாள் இல்லை. அதை இலங்கை அரசு அகற்றியுள்ளது.

மேலும் அவரது வலது கை மடக்கி வைக்கப்பட்ட நிலையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. சங்கிலிய மன்னன் சரணடைவது போன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை. இதற்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அந்த அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்கிலியன் கையில் இருந்த வீரவாளைக் கண்டு பயந்த( ஆஹா யார் யாரை பார்த்து பயந்தார்கள் என்பது இவர்களுக்கு இன்னும் புரியல்ல என்னங்கட ஒட்டுமொத்தமாக கீழ்பாக்கத்துக்கு போய்ட்டாங்க?) இலங்கை ராணுவம், சிங்கள அரசியல்வாதிகள், மந்திரிகள், யாழ்ப்பாண நகரபிதா, வட மாகாண அரசாங்க அதிபர், அமைச்சர் டக்ளஸ், அந்த வீரவாளை எடுத்து விட்டு புதிய சங்கிலியன் சிலையை அதே இடத்தில் வைத்திருக்கிறார்கள்.

முழுப்பித்தலாட்டம் என்பதன் பொருள் இதுதான். பிரசுரிக்கப்பட்ட புதிய படத்தில்கூட வீரவாள் தெளிவாக தெரிகிறது. ஆனாலும் அரசியல் விபச்சாரம் செய்வோம் என்று அடம்பிடிக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் மிஞ்சும் அளவுக்கு ஊடகங்களும் கிளம்பியிருப்பது என்ன வென்பது?
இந்திய ஊடகங்களின் பொய் பித்தலாட்டம் சங்கிலியன் வாழை கானவில்லியாம்.
மேலே உள்ள நல்லூர் கொடிசீளை பவனி கானொளியில் சங்கிலியனும் தெரிகிறான் அவனது வாழும் தெளிவாக தெரிகிறது கண் உள்ளவர் காணீர்.

கருத்துகள் இல்லை: