வியாழன், 4 ஆகஸ்ட், 2011

இளம் பெண்ணை கற்பழித்ததாக சாமியார் கைது

டெல்லியில், இளம் பெண்ணை கற்பழித்ததாக சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் பாபா வாம்தேவ் ராம் (வயது 26). ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர் டெல்லியில் பழங்குடியின மக்களுக்கான நலச்சங்கம் ஒன்றை நடத்தி வருகிறார்.
சாமியார் பாபா வாம்தேவ் ராமிடம் தான் ஆலோசனை கேட்க சென்றதாகவும், அப்போது அவர் தன்னை கற்பழித்து விட்டதாகவும் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த பழங்குடியின இளம் பெண் ஒருவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வாம்தேவ் ராமை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், இவர் ஏற்கனவே ஒரு கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: