சனி, 6 ஆகஸ்ட், 2011

புலிகளின் வலையமைப்பின் மதிவாணன் மலேசியாவில் கைது

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பின் இரண்டாம் நிலை தலைவர் எனக் கூறப்படும் திருகனக சம்பந்தன் மதிவாணன் என்பவரை மலேசிய புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். இவர் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் தலைவராக உள்ள கஸ்ரோ என்பவருக்கு அடுத்ததாக செயற்பட்டு வந்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள மதிவாணனை இலங்கைக்கு நாடு கடத்த மலேசிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மலேசிய உள்துறை அமைச்சர் நிஷாமுதீன் உசேன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கே.பி. மலேசியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து மதிவாணன் தலைமறைவாகியிருந்தாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: