சனி, 6 ஆகஸ்ட், 2011

3 வினாடிகளுக்கு ஒரு குழந்தை திருமணம்



உலகளவில் குழந்தை திருமணம் மூலம் பெண் குழந்தைகளின் வாழ்வு பல வகையில் சீரழிக்கப்படுகிறது. பெரும்பாலும் இப்பெண் குழந்தைகளின் ஏழ்மை, அறியாமையைக் காட்டி குழந்தை திருமணம் என்னும் பாழும் கிணற்றில் தள்ளி அவர்களின் முன்னேற்றம் மறுக்கப்படுகிறது.
பெரும்பாலும் குழந்தை திருமணத்திற்கு தள்ளப்படும் பெண் குழந்தைகளின் வயது 14-18 க்குள் இருக்கிறது. மேலும், இப்பெண் குழந்தைகளை வயதான பணக்காரர்களுக்கே மணம் முடிக்கப்படுகிறது.
இத்தகைய குழந்தை திருமணங்கள் அதிகமாக ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளில் தான் நடத்தப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகளவில் லண்டனைச் சேர்ந்த பிரேக்கிங் வவ் என்ற அமைப்பின் தலைவர் மேரிடெளண்டன் குரல் கொடுத்துள்ளார்.

3 நொடிகளுக்கு ஒரு பால்ய விவாகம் வீதம் உலகளவில் ந்டைபெறுகிறது என்றும், இது இன்னும் 10 வருடத்தில் இருமடங்காகும் என் தாம்ஸன் ராய்டர் என்னும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: