திங்கள், 1 ஆகஸ்ட், 2011

நடிகை குஷ்பூ ஊன்றுகோலுடன் அதிமுக அரசுக்கு எதிரான போராட்டத்தில்



சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே திமுகவினர் நடத்திய போராட்டத்தில் நடிகை குஷ்பூ கலந்துகொண்டார். அவர் போராட்டத்திற்கு ஊன்றுகோலுடன் வந்தார்.

நடிகை குஷ்புவுக்கு திமுகவில் பதவி எதுவும் கொடுக்காவிட்டாலும், அவர் கட்சிப் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். ஆளும் அதிமுக அரசு திமுகவினருக்கு எதிராக பொய் வழக்குகள் போடுவதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன் திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பூவும் கலந்து கொண்டார். இதனால் ஸ்டாலினுடன் சேர்த்து குஷ்பூவும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, இந்த ஆர்ப்பாட்டம் எதற்காக என்றால் திமுகவினர் மீது தேவையில்லாமல் பொய் வழக்கு போட்டு கைது செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு என்ன மாற்றம் வருகிறது என்று பார்ப்போம் என்றார். 
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மலையாளப் படபிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கையில் குஷ்பு கால் இடறி கீழே விழுந்ததில் கால் எழும்பு முறிந்தது.

இந்த நிலையிலும் போராட்டத்திற்கு ஊன்றுகோலுடன் குஷ்பு வந்ததைப் பார்த்து கட்சியினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மகளிர் அணியினர் அவரை அழைத்துச் சென்று ஓரமாக அமர வைத்தனர். பின்னர் ஸ்டாலினுடன் சேர்ந்து அவரும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்

கருத்துகள் இல்லை: