ஞாயிறு, 31 ஜூலை, 2011

நீரில் மூழ்கி மரணம் கீரிமலையில் தந்தைக்கு ஆடி அம்மாவாசை பிதிர்கடன் செய்த மகன்

ஆடி அமாவாசையான நேற்றைய தினம் இரவு தந்தையாருக்காக மோட்ச கிரியைகளை மேற்கொண்ட நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று யாழ் வடக்கில் பதிவாகியுள்ளது.


கோவிலில் பூஜை நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு கீரிமலை தீர்தக்கேணியில் முழுகச் சென்ற நபரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மாணிப்பாய் சுதுமலையில் வசித்துவந்த 32 வயதான விஜிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
கீரிமலையில் தந்தைக்கு ஆடி அம்மாவாசை  பிதிர்கடன் செய்த மகன் நீரில் மூழ்கி மரணம்   கீரிமலையில்

கருத்துகள் இல்லை: