ஞாயிறு, 31 ஜூலை, 2011

3.95 ஏக்கர் நிலம் அழகிரியின் மனைவி காந்தியின் பெயருக்குக் கைமாறியது.

மதுரையை ஒட்டிய உத்தங்குடியில் இருக்கிறது நாகர் ஆலயம். அதற்குச் சொந்தமான 17.24 ஏக்கர் நிலம்தான் இந்த சர்ச்சைக்குக் காரணம். இதில், 3.95 ஏக்கர் நிலம் அழகிரியின் மனைவி காந்தியின் பெயருக்குக் கைமாறியது. இந்த நிலத்தை, விற்கவோ, வாங்கவோ கூடாதாம். அதை மீறி, இந்தப் பரிமாற்றம் நடந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலங்களை மார்ட்டின் வாங்கியுள்ளார். அதில் 3.95 ஏக்கரை காந்தி பெயருக்கு மாற்றி உள்ளார். இந்த ஆலயத்தை உருவாக்கிய நாகேந்திர ஐயரின் பேரன்தான் இந்தப் பிரச்னை தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தார். மார்ட்டினை வளைக்கும் போலீஸ், அடுத்ததாக காந்தி அழகிரியைக் குறிவைத்துக் களத்தில் குதிக்கப்போகிறது. இரண்டொரு நாட்களில் இதற்கான முஸ்தீபுகள் ஆரம்பம் ஆகலாம். இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் அழகிரி. நித்தமும் வக்கீல்களைப் பார்த்து ஆலோசிப்பதிலேயே அவரது நேரம் கழிகிறது. மதுரை முதல் டெல்லி வக்கீல்கள் வரை இந்த ஆலோசனையில் மூழ்கி உள்ளார்கள்!''

கருத்துகள் இல்லை: