சனி, 4 ஜூன், 2011

ஊழலை ஒழிக்க கோடிகள் செலவில் உண்ணாவிரதம், இது மிகப்பெரிய ஊழல்


பல கோடி ரூபாய் செலவழித்து போராட்டம் நடத்துவது ஏன்? ராம்தேவுக்கு காங். கேள்வி

ராம்தேவ் உண்ணாவிரதம் அர்த்தமற்றது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான திக்விஜய் சிங் கூறியுள்ளார். எந்த நோக்கத்திற்காக இந்த போராட்டம் நடைபெறுகிறதோ, அதில் இருந்து அவர் விலகி நிற்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் ராம்தேவ், பல கோடி ரூபாய் பணம் செலவழித்து போராட்டம் நடத்துவது ஏன்? ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுவதுபோன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ராம்தேவ் உண்ணாவிரத்திற்குப் பின்னால் ஆர்எஸ்எஸ் இயக்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால்தான் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் உண்ணாவிரத்தை கைவிட ராம்தேவ் மறுத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
மேலும் பேசிய திக்விஜய் சிங், அன்னா ஹசாரே போன்றோர் ராம்தேவ் உண்ணாவிரத்துக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை: