வெள்ளி, 24 ஜூன், 2011

இலவசமாக கறவை மாடு, ஆடு வழங்கும் திட்டம்: ஜெயலலிதா ஆலோசனை


முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் 24.06.2011 அன்று தலைமைச் செயலகத்தில், தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி இலவச கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், கால்நடைத்துறை அமைச்சர், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர், பால்வளத்துறை ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளர், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையின் சிறப்பு பணி அலுவலர் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
ஆடு மாடு மேய்க்க போங்கள்  என்று இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் ஜெயலலிதா  இது என்னவோ குலக்கல்வியை ஒழித்துக்கட்டிய  சுமரியாதை இயக்கத்திற்கு விடப்பட்ட ஒரு சவால் போல தோன்றுகிறது

கருத்துகள் இல்லை: