வியாழன், 23 ஜூன், 2011

எல்.ரி.ரி.ஈ அப்பாவி தமிழ் மக்களை கொன்றது மட்டுமல்லாது அவர்களது உடைமைகளையும் கொள்ளையிட்டனர்.

இறுதிக் கட்டத்தில் தமிழர்களை புலிகள் சுட்டுக் கொன்றனர்: தமிழர்கள் புலிகளால் பணயம் வைப்பு: அமைதியை ஏற்படுத்தியதற்கு தமிழ் மக்கள் பாராட்டு
- ‘கார்டியன்’ கட்டுரைக்கு இலண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர் பதிலடி
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எல்.ரி.ரி.ஈ தமிழ் மக்களை சுட்டுக்கொன்றதாகவும், அவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்தியதாகவும் பிரிட்டனில் வாழும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட எஸ். வாசுதேவன் என்பவர் அங்கிருந்து வெளியாகும் கார்டியன் நாளிதழுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கார்டியன் பத்திரிகை இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவம் யுத்த மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அண்மையில் விசேட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் முகமாக எஸ். வாசுதேவன் என்பவர் அந்த பத்திரிகைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
‘உங்களது பத்திரிகையில் கடந்த 13.06.2011ஆம் திகதியில் பிரசுரித்திருந்த கட்டுரைக்கு அதிருப்தி அடைந்தே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அந்த கட்டுரையில் இலங்கை அரசு மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை நான் முற்றாக மறுக்கிறேன். 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்த பின் நான் இலங்கைக்கு நான்கு முறை சென்றுள்ளேன். அதன்போது யுத்தத்துக்கு முகம் கொடுத்த பலருடன் கலந்துரையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர்களின் கருத்துக்கு முற்றும் முரணான செய்தியே உங்களது பத்திரிகையிலிருந்த கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.
நான் சந்தித்த மக்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் தப்பி வந்தவர்களாவர். அவர்களை இலங்கை இராணுவம் தியாகத்துடன் இன்னும் பாராமரித்து வருகின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தில் தமது தியாகத்தால் 6,000 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதில் எல்.ரி.ரி.ஈ யினால் தமிழ் மக்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர் என்பதே உண்மை.
மேற்படி கட்டுரையில் கூறப்பட்டிருந்த 40 ஆயிரம் பொதுமக்கள் காயமடைந்தனர் என்ற தகவல் தவறானது என்பதை குறிப்பிடுகின்றேன். இது பிரிட்டன் தமிழ் போரம் அழைப்பினால் வெளியிடப் பட்டது. இது குறித்து நீங்கள் உண்மையான விசாரணை செய்வதாக இருந்தால் 2009ம் ஆண்டு காயமடைந்தோர் பற்றிய தகவலை பெற்றிருக்க வேண்டும்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது யுத்த சூன்ய பிரதேசத்திற்குள் எல்.ரி.ரி.ஈ தனது கனரக ஆயுதங்களுடன் போரிட்டது. இந்த பகுதிக்குள் அவர்கள் தமது கனரக ஆயுதங்களை கொண்டுவந்தது மட்டுமல்லாது மருத்துவமனை வளாகத்திற் குள்ளும் ஆயுதங்களை கொண்டு சென்றனர். இந்த நடவடிக்கையால் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
யுத்தத்தின் போது கொல்லப்பட்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களையே யூடியூப் இணையத்தளத்தில் உங்களால் காண முடிகிறது. இதனை தமிழர்களும் உறுதிப்படுத்துவார்கள். எல்.ரி.ரி.ஈ அப்பாவி தமிழ் மக்களை கொன்றது மட்டுமல்லாது அவர்களது உடைமைகளையும் கொள்ளையிட்டனர்.
எல்.ரி.ரி.ஈக்கு சமாதான வழியில் அரசியல் தீர்வை பெற பல வாய்ப்புகள் கிடைத்தன.  ஆனால் அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் புறக்கணித்தனர். இதனால் எல்.ரி.ரி.ஈயை முடிவுக்கு கொண்டு வருவதை விட இலங்கை அரசுக்கு வேறு வழி இல்லாமல் போனது. ஆம், எல்.ரி.ரி.ஈக்கு எதிராக இலங்கை அரசு கடுமையான யுத்தத்தை முன்னெடுத்தது. ஆனால் அவர்கள் இப்போது இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். இலங்கை அரசு யுத்தத்தின் போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
இதன் மூலம் நல்ல தீர்வு கிட்டும் என எதிர்பார்க்கிறேன். இலங்கை தமிழ் மக்கள் ஏனைய மக்களுடன் இணைந்து இலங்கையில் அமைதியாக வாழ்வதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனவே, பழைய கசப்பான சம்பவங்களை கிளரி அமைதியை குலைக்க வேண்டாமென்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு அந்த கடிதத்தில் எஸ்.வாசுதேவன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: