வெள்ளி, 24 ஜூன், 2011

நமக்கு பகீரென்கிறது?ஆஹா பிஜேபி அம்மாவுக்கு 3 மாதம் அவகாசம் கொடுத்திருகாளாம்

மூன்று மாத காலங்களுக்கு தாங்கள் அதிமுக அரசை விமரிசிக்கப் போவதில்லை என்று தமிழக பாஜக முடிவெடுத்துள்ளது. அப்பாடா.. இப்போது தான் முதல்வர் ஜெ. நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார். இவர்கள் பாட்டுக்கு அரசின் அனைத்து திட்டங்களையும் விமரிசித்து மக்களிடம் விழிப்புணர்வு பெருகி அப்படி இப்படி என்று ஆட்சி கவிந்து விட்டால் என்னாவது?! நன்றி பாஜக! மூன்று மாதங்கள் கழித்து பாஜகவின் விமரிசனங்களுக்கு இடம் கொடுக்காமல் அம்மா எப்படி ஆட்சி செய்யப் போகிறாரோ என்று நினைத்தால் இப்போதே நமக்கு பகீரென்கிறது. அம்மாவுக்கு எப்படி இருக்கும்?!

சும்மா சதா சீரியஸ் நியுசையே வாசித்தால் எப்படி கொஞ்சம் சிரிக்கவும் தான் தமிழக பிஜேபி இருக்கிறதே இந்த பட்டியலில் நம்ம வைகோவும் விரைவில் வருவார் 


கருத்துகள் இல்லை: