திங்கள், 20 ஜூன், 2011

பத்மநாவின் 21வது நினைவுதினம்!

 புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாவின் 21வது நினைவுதினம் இன்றாகும் இதனை முன்னிட்டு யாழ் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது.

கங்கா தலைமையில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமான இந்த அஞ்சலிக்கூட்டத்தில் தோழர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஈழவிடுதலைப் போராட்டத்தின்போது மரணித்த, கட்சித் தோழர்கள், பொதுமக்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களைச்சார்ந்த அனைவருக்குமாக இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னராக மறைந்த தோழர்களின் திருவுருப்படத்திற்கு மலர்அஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு இன்று – ஜூன் 19 – யாழ்ப்பாணத்தில் இரத்த தானம் !:(பத்மநாபா ஈபிஆர்எல்எப்)
பாசிச புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாவின் 21வது நினைவுதினம் இன்றாகும் இதனை முன்னிட்டு யாழ் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றதுடன். தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களினால் யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்ததானமும் வழங்கப்பட்டது.

மத்தியகுழு உறுப்பினரான கங்கா தலைமையில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமான இந்த அஞ்சலிக்கூட்டத்தில் தோழர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஈழவிடுதலைப் போராட்டத்தின்போது மரணித்த, கட்சித் தோழர்கள், பொதுமக்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களைச்சார்ந்த அனைவருக்குமாக இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னராக மறைந்த தோழர்களின் திருவுருப்படத்திற்கு மலர்அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கங்கா தலைமையில் யாழ் வைத்தியாலையின் இரத்தவங்கிக்கு சென்ற தோழர்களும், ஆதரவாளர்களும் இரத்ததானம் வழங்கினர்.

கருத்துகள் இல்லை: