வியாழன், 31 அக்டோபர், 2019

நவீன மருத்துவம் மீது பொய் பிரசாரங்களை பார்பனீயம் + முருகதாஸ் + அட்லி வகையறாக்கள் ...

Ganesh Babu  : நம் சமூகத்தில் கணிசமானவர்களுக்கு நவீன (அலோபதி) மருத்துவர்கள் மீது அதிர்ச்சி அளிக்கத்தக்க அளவுக்கு வன்மமும், பொறாமையும் உள்ளது என்பதுதான் உண்மை. இதற்கு காரணமாக பலர் இருந்தாலும், எனக்கு சட்டென நினைவுக்கு வருபவர்களின் பட்டியல் இது:
1. நவீன மருத்துவத்தின் மீது இடைவிடாமல் போலி பிரச்சாரம் செய்யும் டூபாக்கூர் நாட்டுமருந்து கும்பல்.
2. ஊடகத்தின் மூலம் மருத்துவர்களை ஏதோ பணவெறிப் பிடித்த பேய்களைப் போல சித்தரித்து அயோக்கியத்தனமான பொதுப் புத்தி ஒன்றைக் கட்டமைத்துள்ள முருகதாஸ், அட்லி போன்ற பிராடுகள்.
3. ஒருக்காலத்தில் 'மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும்' என்று அதிகாரப்பூர்வ விதிமுறையே இருந்த அளவுக்கு 'அவாள்' மட்டுமே கோலோச்சி வந்த ஒரு துறையை, பெரியாராலும், திராவிட இயக்கத்தாலும் இன்று பார்ப்பனரல்லாதவர்கள் கைப்பற்றிவிட்டார்களே என்ற வயிற்றெரிச்சலில், "தற்கால மருத்துவத்துறையின் தரம் கெட்டுவிட்டது" என்று ஓயாமல் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் பார்ப்பனர்கள்.
Last but not least, ஒரு விசித்திரமான கும்பல் உண்டு
4. பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் ஓரிரு மதிப்பெண்கள் குறைந்ததால் கவுன்சிலிங்கில் மருத்துவராகும் வாய்ப்பைப் பறிக்கொடுத்தவர்களுள் சிலர்.
இவர்களை தவிர்த்து இயல்பாகவே பிறர் மீது பொறாமைப்படுவதைத் தவிர வேறு ஒரு மயிரும் தெரியாத சைக்கோக்கள்.
வேறு யாராவது விடுப்பட்டிருந்தால் கமெண்ட்டில் குறிப்பிடவும்.

கருத்துகள் இல்லை: