வியாழன், 31 அக்டோபர், 2019

SujithHackathon ஆழ்துளை கிணற்றில் விழுந்தால் .. இப்படி தூக்க தூக்கமுடியுமா?

Alwar Narayanan : சுஜித்...  எனக்கு தோன்றியதை இங்கே பதிவிடுகிறேன். ஆர்வமுள்ளவர்கள் இதை மேம்படுத்தி வடிவமைப்பாளர்களுக்கு அனுப்பவும்.
குழந்தை ஆழ்துளை குழியில் (போரில்) விழுந்தவுடன் பக்கவாட்டில் குழிதோண்டுவது இயலாத காரியம். மண் சரியும், நேரமெடுக்கும் etc
நேராக விழுந்த பாதையில் தூக்குவதுதான் விரைவான தீர்வாகும்.
அ) முதலில் மண்டையை கவ்வ வேண்டும். மண்டைதான் குழியை அடைக்கும். ஆக்சிஜன் கொடுத்துக்கொண்டே ரப்பர் கிண்ணத்தை கொண்டு உச்சந்தலை மண்டையை தொட்டு காற்றை உறிஞ்சினால் கப்பு ஒட்டிக்கொள்ளும். (sticking by Vaccum Suction). பிரசவத்தின் போது குழந்தையை இழுப்பதுபோல இது.
ஆ) ஆனால் இழுக்க / தூக்க கூடாது. இது மேலும் கீழே போகாமல் தடுக்கமட்டும்தான்.
இ) இப்போது பக்கவாட்டின்மூலம் (கொஞ்சம் மண்ணை சுரண்டியாவது) "L" போன்ற கம்பியை / பட்டையை நுழைத்து மோவாய்கட்டையை பிடிக்கவேண்டும். அதாவது (கெஜ்ரிவால் மப்ளர் கட்டிக்கொண்டதுபோல, அல்லது சவத்துக்கு துணிக்கட்டுவதுபோல தாடைக்கு அடியில் இருந்து உச்சந்தலை வரை கட்டு போட்டிருப்பார்கள்) - தாடையில் பிடி கிடைத்தால் தலையை கொஞ்சம் மேலே தூக்கமுடியும். தவறில்லை. ஒன்றும் ஆகாது. (கழுத்தை சுற்ற கூடாது)
ஈ) இப்படி செய்தால் உடம்பு கொஞ்சம் நீள்படும். பக்கவாட்டில் சந்து (Gap) கிடைக்கும். இந்த சந்தில் ஒரு மெல்லிய குழாயை சொருகி அதன் நுனியில் பலூன் கொண்டு குழந்தைக்கு அடியில் நிரோத் போன்ற உடையாத ஆனால் கனமான பலூனை விரிவாக்கிக்கொண்டே போகவேண்டும். பலூன் மேலும் இறங்காமல் பார்த்துக்கொள்ள மட்டும்தான்.

உ) இப்போது தைரியமாக குழந்தையை மேலும் ஒரு அடி மேலே தலையை பிடித்து இழுத்து, தோளை பிடிக்க (இரண்டு இடுக்கி போன்ற அமைப்பு ) கொஞ்சம் வலியோடு மெதுவாக மேலே தூக்கிவிடலாம்.
காமிரா மற்றும் இத்தகைய லிவர்களை உள்ளடக்கிய சட்டம் தயாரிக்க வேண்டும்.

Raju Bharathy : முதலில் குழந்தை கீழே இறங்கிவிடாமல் இருக்க வழி செய்துவிட்டே வேறு எந்த முயற்சியும் மேற்கொள்வது நல்லது.அதற்கு Concentrated glue தடவிய கயிற்றை விட்டு கை களை பிடிக்க செய்திருக்கலாம்.அது நழுவுவதற்கு வாய்ப்பில்லை.குழந்தையின் கை சதையை கொஞ்சம் பதம் பார்க்கத்தான் செய்யும்.வெளியே எடுத்தபின்னர் மருத்துவம் செய்து சரியாக்கிவிட முடியும். இதன் பிறகே பலூன் சிஸ்டத்தை உயோகப்படுத்தி குழந்தையின் அடிப்பகுதிக்கு முட்டு கொடுத்து விட்டு பக்கவாட்டில்தோண்டினாலும் எதுவும் ஆகாது குழந்தை கீழே இறங்காது

கருத்துகள் இல்லை: