வியாழன், 31 அக்டோபர், 2019

தங்கம் ரசீது இல்லாமல் வைத்திருந்தால் .. பதுக்கல் தங்கமாக கருதப்பட்டு .. வரி வட்டி தண்டம் அறவிடப்படும் .. அல்லது பறிமுதல் ... வழிப்பறி கொள்ளை தொடர்கிறது?

டுபாக்கூர்துனியா : கருப்பு பணத்தில் , அதாவது மக்கள் தங்களிடம் வைத்திருக்கும் தங்க நகைகளுக்கு ரசீது வதிருக்கவேண்டுமாம்.  பரம்பரையாக குடும்பங்கள் வைத்திருக்கும் தங்க நகைகளுக்கு ரசீது யாரிடம் இருக்க போகிறது? புதிய சட்டப்படி அவை எல்லாம் பதுக்கிய தங்கம் என்ற வகையில் சேரும் . கடுமனையான வரி வட்டி தண்டம் எல்லாம் அறவிடப்படும்! கட்ட தவறின் பறிமுதல் செய்யப்படும்! இதைத்தான்  பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் என்று மத்திய அரசு தற்போது ஏற்பாடு செய்துள்ளது !கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது பெரும்பாலான பாஜக  பண முதலைகள் தங்கத்தில் முதலீடு செய்தனர். அதே போன்று இப்போதும் அதே பணமுதலைகள் தங்கள் பணத்தையும் தங்கத்தையும் பாதுகாத்து இருப்பார்கள்
தற்போது மக்களின்  தங்கத்தை வெளியே கொண்டு வர மத்திய அரசு ‘தங்கம் பொதுமன்னிப்பு திட்டம்’ என்ற ஒரு திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது இந்த திட்டத்தின்படி மக்கள்  வாங்கிய தங்கத்தை கணக்கில் காட்டி, அதற்குரிய வரியை செலுத்தி கருப்பு பணம் அல்லாத தங்கமாக வைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி வாங்கிய சுமார் 25 முதல் 30 டன் எடையுள்ள தங்கத்திற்கான வரி கிடைக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறதாம்!
ஆனாலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஒரு சில சிக்கல்கள் எழலாம் என்பதால் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னாக தங்க முதலீட்டாளர்கள், பொருளாதார வல்லுனர்கள் ( ஆர் எஸ் எஸ் பிளஸ் சாமியார்கள்)   மற்றும் தங்க நகை வியாபாரிகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கருத்துகள் இல்லை: