புதன், 30 அக்டோபர், 2019

பிலிப்பைன்சில் நில நடுக்கம் 6.6 ரிச்டர் அளவில் .. ஒரு தமிழரின் நேரடி அனுபவம் .... வீடியோ


Rubasangary Veerasingam Gnanasangary : இங்கு பிலிப்பீன்சில் மூன்று மணி நேரத்துக்கு முன்னர் பலமான இரெண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. நான் வாழும் தமிழன்  எந்தளவுக்கு மனிதாபிமானம் மிக்கவன் என்று நினைக்கும் போது உடலில் உள்ள முடிகள் எல்லாம் குத்திக்கொண்டு நிமிர்ந்து நிக்கிறது.
இங்கு Mall கள்பல சேதம்.  இனி Mallகளுக்கு செல்வதில்லை என்று முடிவு செய்துள்ளோம். மருத்துவ நிலையங்களில் சிகிச்சை நித்தம் நோயாளிகளாக படுத்திருப்பவர்கள் நிலை சொல்லத் தேவையில்லை. Life support இல் இருந்த சிலர் இறந்தும் விடுகின்றனர். ஹோட்டலில் தங்கியிருந்த ஒருவன் அம்மணமாக வெளியே ஓடிய வீடியோ ஒன்று FBயின் உலாவியது. எனக்கும் இப்ப கக்குசுக்குப் போகப் பயமாக இருக்கிறது. நான் முதலில் கக்குசுக்கு போறதுக்கு என்று ஒரு சாரம் தைப்பிக்கணும். நம்ம முன்னாள் ஜனாதிபதி மாதிரி கலர்கலரா சாரத்தோடேயே திரியலாம் என்று இருக்கேன்.
பகுதிதான் மைய்யப் பகுதி. அத்தோடு போன மின்சாரம் மூன்று மணிநேரங்களின் பின்னரே வந்துள்ளது. இந்த முறை பலத்த சேதங்கள். அம்புலன்ஸ் வண்டிகள் ஓடித் திரிந்தன. நாள் ஒன்றுக்கு நூறில் இருந்து இருநூறு வரையான சிறியளவில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இன்னும் ஆறு மாதங்களுக்கு அபாய நிலை தொடருமாம். மின்சாரம் மீண்டும் வந்ததும் Facebook வந்தால் எல்லோருடைய பதிவுக்கும் நான் RIP போடவேண்டி இருக்கு,ம்.

கருத்துகள் இல்லை: