புதன், 30 அக்டோபர், 2019

பயிற்சி மருத்துவர்கள் மற்றும் செவிலியரின் பங்கு அளப்பரியது....

Drprakash Surgeon Thanjavur : கடந்த வாரம், 2 வயது குழந்தை க்கு ஆசன வாய்
வழியாக ரத்த போக்கு ஏற்பட்டு இரவு நேரத்தில் அட்மிட் ஆனான்...
ரத்த போக்கு சுமார் 1 லிட்டர் இருக்கும்....
உடனே 2 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டது...
அடுத்த நாள் பரிசோதனை செய்ய படும் போதே தனியார் மருத்துவமனை க்கு போவதாக சொல்லி அழைத்து போய் விட்டனர்...
இவ்வளவு ஆபத்தான கேஸ் தனியாரில் சமாளிக்க முடியாமல் திரும்ப அரசு மருத்துவமனைக்கே வந்தார்கள்...
மேலும் ரத்த போக்கு மீண்டும் ரத்த ஏற்றம்,,,
அறுவை சிகிச்சைக்கு தயார் செய்யும் முன் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு icu க்கு மாற்றினோம்...
கூடவே காய்ச்சலும் வந்துவிட்டது...
அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய பொற்காலத்தை தனியார் மருத்துவமனைக்கு அலைந்து வீனடித்ததின் விளைவு....
மீண்டும் ரத்த போக்கு....
ஹீமோகுளோபின் 1.3 ஆகி போனது, தட்டணுகள் மிகவும் குறைந்து போய் விட்டது...
அறுவை சிகிச்சை செயதாலும் மரணம் என்ற நிலையில் இருந்தது குழந்தை...
icu டாக்டர் களின் சிறப்பான கவனிப்பில் ஹீமோகுளோபின் 5 ஐ தொட்டது...
அடுத்த ரத்த போக்கு ஏற்படுவதற்குள் அறுவை சிகிச்சை செய்ய திட்ட மிட்டோம்...

அறுவை சிகிச்சை யின் போதே உயிர் பிரியும் வாய்ப்புகள் அதிகம்....
எங்கள் துறை தலைவர் மேற்பார்வையில் அறுவை சிகிச்சை நடந்தது...
ஆயிரம் குழந்தைக்கு ஒரு குழந்தைக்கு
ஏற்படும் Meckel's diverticulum என்ற சிறு குடல் கட்டி காரணம் என்று கண்டு பிடித்தோம்...
பிறகு அதை வெட்டி எடுத்து விட்டு குடலை தைத்து சரி செய்தோம்...
மயக்க மருந்து நிபுணரின் பங்கு மிக முக்கியமானது...
அறுவை சிகிச்சைக்கு பிறகும் ரத்த ஏத்த பட்டது...
ஹீமோகுளோபின் 9 உடன் தம்பி டிஸ்சார்ஜ் ஆகிறான்...
ரத்தம், தட்டணுகள் என்று மொத்தம் 10 பாட்டில்கள் ஏற்ற பட்டது....
பயிற்சி மருத்துவர்கள் மற்றும் செவிலியரின் பங்கு அளப்பரியது....
தீபாவளி அன்று கூட பயிற்சி மருத்துவர் உடன் இருந்து கவனித்து கொண்டார்....
இந்த குழந்தையை போல 1000 ##சுஜித் கள் அரசு மருத்துவமனையில் வருடம் முழுவதும் காப்பாற்ற படுகிறது...
என்ன ஒன்று..
இதை யாரும் சொல்வது இல்லை..">அரசு</

கருத்துகள் இல்லை: