புதன், 16 ஜனவரி, 2019

அடிமை விஸ்வாசம் .. உலகில் அடிமைத்தனத்துக்கு அடையாளம் ,, த மி ழி ன ம்!

Devi Somasundaram : விஜய் டிவில ஒரு பொங்கல் பட்டிமன்றம்..தலைப்பு எது
சிறந்தது நகர வாழ்க்கையா, கிராம வாழ்க்கையா ? ..இப்ப நாம வாழற எந்த வாழ்க்கையுமே சிறந்தது இல்லன்னு தோணிச்சு ,ஆனா பேச வந்தது அதில்ல..
அந்த பட்டிமன்ற ஒரு பார்ப்பன பேச்சாளர் ( ஏன் சாதிபாக்றன்னு வர போறவங்களுக்கு ..போய் நாட்ல பூணூல தடை செய்ய சொல்லி சட்டம் போட்டு வா ..அப்றம் நிறுத்த்றேன் ) ..அவர் அந்த ஆரம்பமே அந்த தலைப்பு சம்பந்தமே இல்லாம சாகித்திய அகாடமி வாங்கின எஸ் ரா வ சுந்தரம் ராமசாமிதான் லெட்டர் போட்டு சென்னை வர சொன்னார், அதனால தான் அவர் சாகித்திய அகாடமி பரிசு வாங்கினார்ன்னு பேசினார் ..
அந்த கூட்டத்துல, மேடைல இருந்த பலருக்கே சுந்தரம் ராமசாமியும் தெரியாது, எஸ் ராவும் தெரியாது, சாகித்திய அகாடமியும் தெரியாது...அங்க ஏன் இந்த தகவல சொல்லனும்..
அது தான் பார்ப்பனியம்....பேசி பேசி பேசி கிடைக்கிற இடத்துலலாம் அலுப்பே படாம தன் சாதி பெருமையை நிலை நிறுத்திட்டே இருப்பாங்க..
சுந்தர ராமசாமி லெட்டர் போட்டாரான்னு நமக்கு தெரியாது..உயிரோட இருந்தாலும் எழுதவே இல்லன்னாலும் அவர் மறுப்பு தெரிவிக்க மாட்டார்...எஸ் ராவும் அப்டிலாம் எந்த லெட்டரும் சுந்தர ராமசாமி தனக்கு எழுதலன்னு சொல்ல முடியாம சிக்க வைக்க பட்ட இடம்..
இது தான் கால காலமா நடக்குது...நம்மை படிக்க விட மாட்டார்கள்....தத்தி குத்தி எவனாச்சும் ஜெயிச்சுட்டா அதுக்கு பார்ப்பான் தான் ஹெல்ப் செய்தான்னு நிறுவ முயற்சிப்பார்கள்...இப்டி பேசி பேசிதான் அம்பேத்கர ஒரு பார்ப்பான் தான் படிக்க வச்சாரு, கலாம ஒரு பார்ப்பனர் தான் கைட் செய்தார், இளையராஜா வுக்கு ஒரு பாலசந்தர், சிவகார்த்திகேயனுக்கு ஒரு அனிருத்ன்னு பார்ப்பனர்கள் தயவுல தான் நாம உருவான மாதிரியே பில்டப் செய்துடுவாஙக..

சமுக நீதி காவலர் மாதிரி காட்டிகிற இவர்கள் இன்னொருபுறம் நீட்க்கு ஆதரவா, ரிஸ்ர்வேஷனுக்கு எதிரா பேசற பார்ப்பனர்கள மறந்தும் விமர்சிச்சிட மாட்டார்கள்.. அப்படி எழுதும் பார்ப்பனர்கள் யாரும் இந்த லோகத்துலயே இல்லன்ற மாதிரி கம்முன்னு கடந்துடுவாங்க...
இன்னொரு பட்டி மன்றத்துல பாரதி பாஸ்கர் தமிழ் கலாச்சாரத்தை தமிழன் தொலைச்சுட்டான் , தமிழ் எழுத படிக்கவே தெரிலன்னு பேசினார்...அவர் மறந்தும் பார்ப்பனிய சி பி எஸ் சி ,மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தான் இதற்கு காரணம்னு பேச மாட்டார் ..
இன்னும் பத்து வருடம் போனா எஸ் ரா சுந்தரம் ராமசாமி தயவுல தான் எழுத கத்துகிட்டார்ன்னு நாலு பார்ப்பனர் பேசுவார்கள்...
அப்டி யாரை ஆதரிப்பது போல் நடிக்கிறார்கள்ன்னு பார்த்தா பார்ப்பனியத்தை கடுமையா எதிர்க்கும் எந்த வெற்றியாளரையும் ஆதரிக்க் மாட்டார்கள்... பாரதிய தன் தலைவனா கொண்ட பாரதிதாஸன கொண்டாட மாட்டார்கள்..ஆனா ஜெயகாந்தன கொண்டாடுவார்கள்...பாரதி தாஸன் பார்ப்பனியத்தை எதிர்த்தவர்.... ஜெகே எதிர்க்கல...அது தான் அதற்கான தகுதி. இமயம், விமு , யுவா இவர்களை பாராட்ட மாட்டான் பார்ப்பான், ஜெமோ, சாரு பாராட்டுவான் .தன் இன பகைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பதில் அவர்கள் ஒற்றுமை அசாத்தியமானது.
சரி நம்ம ஆட்கள் என்ன செய்வான்...கலைஞருக்கு பாராட்டு கூட்டம் போட்டா நாலு வார்த்தை பாராட்டிட்டு ஆயிரம் இருந்தாலும் அவரிடம் விமர்சனம் இருக்குன்னு பத்து வார்த்தை திட்டுவான்..
கலைஞர் எதிர்ப்பு கூட்டம் போட்டு பார்ப்பனர்களே நாம கூட இவ்லோ எதிர்க்கலயேன்னு வெக்க படற அளவு கலைஞர திட்டுவான் .
பார்ப்பனர்க்கு பாராட்டு கூட்டம் போட்டா அவரை பாராட்டிட்டு பொண்டாட்டி பொறந்த நாள மறந்தாலும் மறப்பான் இப்டி பட்ட நல்ல பார்ப்பனர் களை கலைஞர் எதிர்க்கிறார்ன்னு நாலு வார்த்தை திட்ட மறக்க மாட்டான் ...
உலகில் விஸ்வாசத்திற்கு அடையாளம்னு இனிமே தமிழன சொல்லலாம்...அத்தனை அடிமை விஸ்வாசம்..
என் ப்ரண்ட் பார்ப்பனர் ஒருத்தன் சொல்வான் . ஆடுகள் நரிக்கு உணவு...சயிண்டிஸ்ட் நரிகிட்டேர்ந்து ஆடுகள காப்பாத்துற வேலை செய்ய மாட்டாங்க.., பெரியாரும் , கலைஞரும் ஆடுகள நரிகிட்டேர்ந்து காப்பாத்த முயற்சி செய்தது தப்பு....அதோட தண்டன கிடைச்சி தான் தீரும்னு....அப்ப சுருசுருன்னு கோவம் வந்துச்சு ....இப்ப அவன் சொன்னது சரியோன்னு தோணுது..
#தேவி .
இப்ப வருவான் பார்....ஸ்டாலின் நடத்துற ஸ்கூல்ல தமிழ் பேசுனா fine அதை கேட்க மாட்டியேன்னு....ஸ்டாலினே நாம ஸ்கூல் நடத்துறோம் போலன்னு நம்பற அளவு ஆத்துவாங்க.....
.#ஆரியமாயை

கருத்துகள் இல்லை: