வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

சமுகநீதியின் பொற்காலம் . 1989 -1991 வரை இரண்டு வருடங்கள் மட்டுமே கலைஞர் ஆட்சியில் இருந்தார்

Don Vetrio Selvini : 1989 -1991 வரை இரண்டு வருடங்கள் தான் கலைஞர்
தலைமையிலான திமுக அரசு ஆட்சியில் இருந்தது. இந்த இரண்டு வருடகாலம் தான் தமிழக சமூக நீதியின் வரலாற்றில் பொற்காலம் என்று சொல்லலாம்.
1) மகளிருக்கு சொத்துரிமை
2) பெண்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் 30% இட ஒதுக்கீடு
3) முதல் தலைமுறை , தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி
4) ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம் தொடக்கம்.
5) கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை
6) ஏழை எளிய பெண்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம் (இது குறித்து விரிவாக எழுதுகிறேன்)
7) கைம்பெண் மறுமணம் , சாதி மறுப்பு திருமணம் , கைம்பெண்ணின் மகள் திருமணம் , போன்ற நிகழ்வுகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ..
போன்றவை இன்றும் அனைவராலும் பாராட்டப்படும் சமூக நீதி திட்டங்கள்.

கருத்துகள் இல்லை: