புதன், 8 ஆகஸ்ட், 2018

மெரீனாவில் கலைஞர் .. நீதிமன்றம் அனுமதி .. இட ஒதுக்கீட்டுக்காக இன்றுவரை போராடும் கலைஞர்

BBC :"உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல, இறந்தபின்னும் தலைவர்
வெற்றிபெற்றுள்ளார்," என் திமுக தொண்டர்களிடையே துரைமுருகன் பேச்சு.

10.45: தீர்ப்பு வெளியான செய்தி கேட்டு ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் அருகே இருந்த மு.க.ஸ்டாலின் கண் கலங்கினார். 10.43: கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
அண்ணா சமாதி வளாகத்தில் இடம் கோரி திமுக நேற்று இரவு வழக்கு தொடுத்திருந்தது.
10.28: நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் தீர்ப்பு எழுதத் தொடங்கினார்கள்.
 10.26: தமிழக அரசு மற்றும் திமுக ஆகிய இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தன.
 10.21: கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோதி சென்னை வருகை.
10.18: மக்களின் உணர்வுகள் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது. கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதித்தால், நினைவிடம் அமைக்கவும் அனுமதி கேட்பார்கள் என அரசு தரப்பில் வாதம்.
 10.17: "எங்கள் அத்தனை குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் வந்தவர் கருணாநிதி. நான் அவர் மீது நிறைய பாசம் வைத்திருந்தேன். அவரும் என் மீது அதிக பாசம் வைத்திருந்தார். அதை என் வாழ்நாளில் மறக்க முடியாது," என் அன்புமணி ராமதாஸ் பேட்டி.
 10.14: "அரசியல், கலை, இலக்கியம் என இந்திய அளவில் கலைஞர் அளவுக்கு பன்முகத்தன்மை கொண்டவர்கள் யாருமில்லை," என கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி.
 10.11: இந்த மனு மீது உடனடியாக தீர்ப்பு வழங்கக்கூடாது என தமிழக அரசு தரப்பு நீதிபதிகளிடம் கோரிக்கை. தற்போது தீர்ப்பு வழங்காமல் அடுத்த வாரம் வழங்கலாமா என நீதிபதிகள் கேள்வி.
 10.10: அடக்கம் செய்ய நிலம் ஒதுக்கும்படி கோர யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என அரசுத் தரப்பு வாதம்.

கருத்துகள் இல்லை: