செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

எமெர்ஜென்சிக்கு எதிராக எழுந்து நின்ற கலைஞர் .... 1975 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் ஆண்டு

Shalin Maria Lawrence : 1975 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் ஆண்டு இந்திரா காந்தி தன்
ஆட்சி கலையக்கூடாதென்று எமெர்ஜென்சியை கொண்டுவருகிறார் .அன்றைய முதல்வர் கலைஞருக்கு இரண்டு செய்தி வருகிறது .
ஒன்று "எமெர்ஜென்சியை ஆதரிக்க வற்புறுத்தவில்லை ,ஆனால் நீங்கள் வெளிப்படையாக எதிர்க்க கூடாது "
இன்னொன்று "ஜெயப்ரகாஷ் நாராயணனோடும் இந்திராகாந்தியின் தேர்தல் வெற்றியின் மீது வழக்கு தொடர்ந்த நரேனோடும் கூட்டு வைத்திருக்கும் காமராஜரை கைது செய்ய வேண்டும் "
கலைஞர் காமராஜரை அவ்வாறு இல்லத்தில் சந்தித்து தான் ராஜினாமா செய்து விடுவதாக சொல்லுகிறார் .காமராஜர் கலைஞர் தடுக்கிறார் .கலைஞர் காமராஜரை கைது செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறுகிறார் .திமுக எமெர்ஜெண்சிக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறது .
ஜனவரி 31 ,1976 திமுக ஆட்சி கலைக்க படுகிறது .
கலைஞர் வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறார் .

எமெர்ஜென்ஸியால் காமராஜர் மனம் உடைகிறார் .
"எல்லாம் போச்சு ,என் தப்பு " எமெர்ஜெண்சி அறிவிக்கப்பட்டதும் காமராஜர் சொன்ன வார்த்தைகள் .
அக்டோபர் 2 ,1975 .காமராஜர் மாரடைப்பால் உயிர் விடுகிறார் .
அதிக நாள் கழித்து எம்ஜியாரும் கலைஞரும் ஒரே காரில் இறுதி சடங்கிற்கு செல்லுகின்றனர்.
காமராஜருக்கென்று கன்னியாகுமரியில் மணிமண்டபம் கட்டியது திராவிட கலைஞர் .
காமராஜரின் பிறந்தநாளை "கல்வி வளர்ச்சி" நாளாக அறிவிக்க முயற்சிகள் மேற்கொண்டது திராவிட கலைஞர் .
ஆக அரசியல் வரலாறு தெரியாத முட்டாள்கள் இந்த நேரத்தில் காமராஜர் VS கலைஞர் அரசியல் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள படுகிறார்கள்

கருத்துகள் இல்லை: