செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

தமிழக தொலைக்காட்சிகள் மோடியை சந்தித்தது ஏன்? அதை ஏன் இருட்டடிப்பு ? விலை போய்விட்டனர்

மோடியின் மன் கி பாத் – செட்டப்பை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் வேலை நீக்கம் !
வினவு : ராஜினாமா செய்த பத்திரிகையாளர்கள்: (இடமிருந்து) மிலிந்த் கொண்டேகர், புன்ய பிரசுன் பாஜ்பாய் மற்றும் அபிசார் சர்மா. மிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி ஊடக முதலாளிகளும், பத்திரிகையாளர்களும் நரேந்திர மோடியுடன் ஒரு ரகசிய சந்திப்பை நிகழ்த்திவிட்டு திரும்பியிருக்கின்றனர்.
‘முதல்வர், ஆளுநர், பிரதமர் போன்றோரை பத்திரிகையாளர்கள் இப்படி சந்திப்பது நடைமுறையில் இருப்பதுதான். சமீபத்தில் கூட தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை சில பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அது ஒன்றும் பிரஸ் மீட் அல்ல. அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புதான். பிரதமர் உடனான சந்திப்பும் அத்தகையதே’ என்று டெல்லி சென்று வந்த பத்திரிகையாளர்கள் சொல்லி வருகின்றனர்.
இது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு என்றால், புகைப்படங்கள் வெளியானது எப்படி? அதிகாரப்பூர்வமான சந்திப்பு என்றால், புகைப்படங்களை பிரதமர் அலுவலக அமைச்சகம் வெளியிடாமல், பா.ஜ.க-வினர் வழியாக ரகசியமாக பகிரப்படுவது எதனால்? மேலும், பிரதமருடன் பத்திரிகையாளர்கள் ‘அதிகாரப்பூர்வமற்ற’ வகையில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? ட்விட்டரில் யாராவது தங்களை பாராட்டினால் கூட அதை பகிர்ந்து பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழ் பத்திரிகையாளர்கள், பிரதமரை சந்தித்ததைப் பற்றி ஏன் ஒரு வரி கூட எழுதவில்லை? ஏன் ஒரு புகைப்படத்தைக் கூட வெளியிடவில்லை?
ஊடக முதலாளிகள் கூட, பிரதமர் உடனான சந்திப்பு குறித்து தத்தமது ஊடகங்களில் புகைப்படம் வெளியிட்டுக் கொள்ளாதது ஏன்?
ஆகவே, இந்த சந்திப்பில் வெளிப்படையாக என்ன பேசப்பட்டது என்பதற்கு அப்பால், தமிழக ஊடக மனநிலையை தங்களுக்கு இசைவாக மாற்றி அமைக்கும் மறைமுகமான நோக்கம் இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால், ‘பிரதமரே கூப்பிட்டுவிட்டார்’ என்று நினைக்கலாம். மோடி என்ன மோடுமுட்டியா? இந்த சந்திப்பை எப்படி அறுவடை செய்து கொள்ள வேண்டும்? இதன் விளைவு என்னவாக இருக்க வேண்டும் என்பதை திட்டமிடாமலா நாடாளுமன்ற கட்டடத்துக்கு அழைத்து ராஜ உபசாரம் செய்வார்?
பொதுவாக ‘தமிழ்நாடு வட இந்தியா போல் அல்ல… நாங்கல்லாம் வேற மாதிரி’ என்ற பெருமிதம் இங்கே பலருக்கு இருக்கிறது. ஆனால் ஊடகத் துறையை பொருத்தவரை வட இந்தியாவில் ஒலிக்கும் குரல்கள் நம்பிக்கை தருவதாக இருக்கின்றன. அப்படி மோடி அரசின் பொய்களுக்கு எதிராக உண்மைகளை வெளிக்கொண்டு வந்த மூன்று பத்திரிகையாளர்கள் இப்போது வேலை இழப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.
ABP News Network (கொல்கத்தாவைச் சேர்ந்த ஆனந்த பஜார் நிறுவனத்தின் டி.வி) நிர்வாக ஆசிரியர் மிலிந்த் கொண்டேகர், அதே தொலைக்காட்சியின் மூத்த மற்றும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நெறியாளர் புன்ய பிரசுன் பாஜ்பாய் ஆகியோர் ராஜினாமா செய்திருக்கின்றனர்.  மற்றொரு நெறியாளர் அபிசார் சர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருக்கிறார். என்ன நடந்தது?
ஜூன் 20
மோடி நடத்தும் மன் கி பாத் நிகழ்ச்சி. சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சில விவசாயிகள் அதில் பங்கேற்றனர். அதில் சந்திரமணி கவுசிக் என்ற பெண்ணும் ஒருவர். ‘’நான் என்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுக் கொண்டிருந்தபோது 15 ஆயிரத்தில் 20 ஆயிரம் ரூபாய் எனக்கு கிடைக்கும். அது எதற்குமே போதாது. பிறகு எங்கள் கிராமத்தை சேர்ந்த சில பெண்கள் ஒன்று சேர்ந்து சீத்தாப்பழம் பயிரிட்டோம். அதில் முன்பு கிடைத்ததை விட இரண்டு மடங்கு வருமானம் கிடைத்தது’’ என்று பேசினார்.
ஜூலை 8
ஏ.பி.பி. நியூஸ் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் பிரைம் டைம் நிகழ்ச்சி, ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’. இதன் நெறியாளர் புன்ய பிரசுன் பாஜ்பாய். இந்நிகழ்ச்சியில், நெல் பயிரில் இருந்து சீத்தாப்பழ விவசாயத்துக்கு மாறிய பிறகு தன் வருமானம் இரட்டிப்பாகி விட்டது என்று பேசும்படி தனக்கு அதிகாரிகள் பயிற்சி அளித்ததாக சந்திரமணி கவுசிக் ஏ.பி.பி. செய்தி தொலைக்காட்சிக்கு பேசியிருந்தார். இதை வைத்து அன்றைய நிகழ்ச்சியை நடத்தினார் பாஜ்பாய்.
ஜூலை 9
மோடி அரசின் பொய், பித்தலாட்டம் அம்பலமாவது இது முதல்முறையல்ல என்றாலும், ‘இவ்வளவு அற்பமான பொய்களையும் சொல்லக்கூடியவர்கள்’ என்ற வகையில் இது இந்தி பேசும் மாநிலங்களில் பரபரப்பானது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த விவாதத்தின் இணைப்பை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டதும் இது மேலும் சூடு பிடித்தது.
‘’அந்தப் பெண் ஒரு பெட்டி நிறைய சீத்தாப் பழங்களை கொண்டு வந்தது கேமராவில் பதிவாகியிருக்கிறது. பிறகு ஏன் இப்படி ஊடகம் முழு பொய் சொல்கிறது?” என்று கொதித்தார் நிர்மலா சீத்தாராமன். குற்றச்சாட்டையே பதிலாக சொல்லும் இந்த மேதமை பா.ஜ.க.வினரின் அடிப்படைப் பண்பு.
ஆனால் வழக்கம்போல் பா.ஜ.க. அமைச்சர்கள் இதை கடுமையாக மறுத்தார்கள். ‘’அந்தப் பெண் ஒரு பெட்டி நிறைய சீத்தாப் பழங்களை கொண்டு வந்தது கேமராவில் பதிவாகியிருக்கிறது. பிறகு ஏன் இப்படி ஊடகம் முழு பொய் சொல்கிறது?” என்று கொதித்தார் நிர்மலா சீத்தாராமன். குற்றச்சாட்டையே பதிலாக சொல்லும் இந்த மேதமை பா.ஜ.க.வினரின் அடிப்படைப் பண்பு. தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர்  ’’எதிர்க்கட்சிகளின் பொய்யான அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஊடகங்கள் ஒத்து ஊதுவது அவமானம்” என்று பொங்கினார்.
ஜூலை 10
அமைச்சர்களின் இந்த அதிரடிக்குப் பிறகு ஏ.பி.பி. நியூஸ் மீண்டும் தன்னுடைய செய்தியாளரை சந்திரமணி கவுசிக்கின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது. அவர் பயிற்சி அளித்து பேச வைக்கப்பட்டார் என்பதை கிராமவாசிகளின் பேட்டிகள் மற்றும் வருமானம் இரட்டிப்பு பொய் குறித்த புள்ளி விவரங்களுடன் மீண்டும் ஒரு செய்தித் தொகுப்பை ஒளிபரப்பியது. ’’நாங்கள் பொய் செய்தி வெளியிட்டதாக கூறுவோருக்கு இதுவே எங்கள் பதில்” என்று அந்த செய்தித் தொகுப்பின் இணைப்பை பகிர்ந்து கொண்டது. இதன்பிறகு வெறிப்பிடித்ததுபோல் மாறியது பா.ஜ.க. கும்பல். ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சமயத்தில் ஏ.பி.பி. நியூஸ் நெட்வொர்க்கின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டது. அந்நிகழ்ச்சி வரும் நேரத்தில் டி.வி. திரை கருப்பானது.



‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சமயத்தில் ஏ.பி.பி. நியூஸ் நெட்வொர்க் முடக்கப்பட்டது.
ஜூலை 17
’செயற்கைக்கோள் வழியே ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியையே தொந்தரவு செய்யும் அளவுக்கு வலிமைப்படைத்தவர்களுக்கு நன்றி” என்று ட்விட் செய்தார் பாஜ்பாய். ஆனாலும் தொலைக்காட்சி திரை கறுப்பாக மாறுவது  நிற்கவில்லை.
ஜூலை 23
பாஜ்பாயின் இந்த ட்விட் அரசியலும், கவித்துவமும் நிறைந்தது.
‘’நீங்கள் தொலைக்காட்சி திரையை கறுப்பாக்குங்கள். ஆனால், நாங்கள் அதை ஒரு கரும்பலகையாக்கி, அதிகாரத்துக்கு எதிரான உண்மையை எழுதுவோம்”
ஜூலை 30
‘தி பிரிண்ட்’ இணையதள பத்திரிகையாளர் குமார் அன்சுமன், ‘’ ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சியை தடுக்கிறார்கள் என்ற செய்தியை ஆரம்பத்தில் நான் நம்பவில்லை. இதோ ஆதாரம். இதற்கு ‘டாடா ஸ்கை’ நிறுவனத்தின் பதில் என்ன?” என்று கேட்டு‘டாடா ஸ்கை’ நிறுவனத்தை டேக் செய்தார். பலர் இதை பின்பற்றி எழுதினார்கள். இதற்குப் பதில் அளித்த டாடா ஸ்கை ‘’எங்கள் தரப்பில் பிரச்னை இல்லை. ஏ.பி.பி. நியூஸின் ஒளிபரப்பு பிரிவில் ஏதேனும் சிக்கல் இருக்கக்கூடும்” என்று பதில் சொன்னது. ஏர்டெல் டி.டி.ஹெச். சேவையை டேக் செய்து கேட்கப்பட்ட இதே கேள்விக்கும் அந்நிறுவனம் இதே பதிலைதான் சொன்னது.
‘’நீங்கள் தொலைக்காட்சி திரையை கறுப்பாக்குங்கள். ஆனால், நாங்கள் அதை ஒரு கரும்பலகையாக்கி, அதிகாரத்துக்கு எதிரான உண்மையை எழுதுவோம்”
ஆகஸ்ட் 2
ராஜ்தீப் சர்தேசாய், ‘’கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் டி.வி. திரை மின்னல் அடித்தது போல வந்து வந்து போகிறது அல்லது முழுவதுமாக கருப்பாகிறது. அரசு அதிகாரத்தை ஊடகங்களை ஒடுக்குவதற்கு பயன்படுத்தும் இந்த போக்கு மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இதுகுறித்து வாய்திறந்து பேச ஒருவரும் தயார் இல்லை – ஏ.பி.பி. நியூஸ் சேனல் தரப்பிலும் கூட” என்று ட்விட் செய்தார்.
இதே நாளில்தான் ஏ.பி.பி. நியூஸ் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் மிலிந்த் கொண்டேகர், தனது 14 ஆண்டு கால பணியில் இருந்து ராஜினாமா செய்தார். அடுத்த நாள் நெறியாளர் புன்ய பிரசுன் பாஜ்பாய் ராஜினாமா செய்தார். அபிசார் சர்மா என்ற மற்றொரு பத்திரிகையாளர் நீண்ட விடுப்பில் அனுப்பப்பட்டார்.
இதில் அபிசார் சர்மா எங்கிருந்து வந்தார்? அவர் என்ன செய்தார்?
ஜூலை 30
ஏ.பி.பி. தொலைக்காட்சியின் மற்றொரு நெறியாளர் அபிசார் சர்மா ’ஆஜ் கி படி கபர்’ என்ற தன்னுடைய விவாத நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். ஜூலை 29-ஆம் தேதி உ.பி. மாநிலம் சுல்தான்பூரில் கூட்டம் நிறைந்த ஓர் உணவகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்து ஒருவர் 3 பேரை சுட்டுவிட்டார். அன்றைய நாளில் நரேந்திரமோடி உ.பி-யில்தான் இருந்தார். ’’உ.பி.யின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவது குறித்து மோடி பேசுகிறார். பல்லாயிரம் கோடி முதலீடுகள் பற்றி பேசுகிறார். ஆனால், அவர் இதை பேசிக்கொண்டிருக்கும் போதுதான், அதே உ.பி.யில் பட்டப்பகலில் சுல்தான்பூரில் ஒரு ஹோட்டலில் துப்பாக்கி சூடு நடந்து மூன்று பேர் சுடப்பட்டார்கள்” என்று தன் நிகழ்ச்சியில் பேசினார் அபிசேக்.
உடனே, ஏ.பி.பி. தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக இயக்குனர் அடிதிப் சர்க்கார்  கடும் கோபத்துடன் தன் அறையில் இருந்து வெளியில்  வந்தார். ’’சுல்தான்பூர் துப்பாக்கிச் சூட்டுக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்? உடனே நிகழ்ச்சியில் இருந்து அபிசார் சர்மா வெளியேற்றப்பட வேண்டும்” என்று செய்தித் தளத்தில் நின்றபடி கத்தினார். ’’லைவ் நிகழ்ச்சியில் இருந்து நெறியாளரை வெளியேற்ற இயலாது” என அவரிடம் மிலிந்த் கொண்டேகர் போராடி அழைத்துச் சென்றார்.
இதன்பிறகு மிலிந்த் கொண்டேகருக்கு அழுத்தம் மேலும் அதிகமானது. புன்ய பிரசுன் பாஜ்பாய், அபிசார் சர்மா ஆகிய இருவரையும் வேலையை விட்டு நீக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது. ஆனால், இதற்கு  மிலிந்த் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக அவர் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பாஜ்பாய் ராஜினாமா செய்தார். அபிசார் சர்மா நீண்ட விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார்.
ஜூலை 31
டெல்லி இந்தி அகாடமி என்ற அமைப்பு தன்னை இந்த ஆண்டின் சிறந்த பத்திரிகையாளர் என கௌரவப்படுத்திருக்கிறது என்பதை எழுதிய அபிசார் சர்மா, அந்த அமைப்புக்கு தான் எழுதிய பதிலையும் வெளியிட்டார்.
‘’என்னுடைய பார்வையில் இதழியல் என்பது ஒரு தரப்புதான். ஆம்… அது எதிர்த்தரப்பு. அதிகாரத்துக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் இடையிலான இந்த சண்டையில் நடுநிலை என்பது பொருளற்றது. அதிகாரத்தில் இருப்பவர்கள் கேள்வி கேட்கப்பட வேண்டும். பதில் சொல்லும் கடமை அவர்களுக்கு இருக்கிறது. கேள்விகளுக்கு அஞ்சுகிற; கேள்வி கேட்போரின் குரல்களை ஒடுக்குற நபர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது நடுநிலை என்பது கேலிக்கூத்தானது. இந்தச் சூழலில் நடுநிலையாக செயல்பட்டால், அது பலவீனமானவர்களை மேலும் பலவீனப்படுத்தி, வலிமையானவர்கள் தப்பிக்க வழிவகுக்கும். ஊடகங்களை ஒழித்துக்கட்ட கங்கனம் கட்டிக்கொண்டு திரியும் ஓர் அரசு அதிகாரத்தில் இருக்கும் இந்நாட்களில் என்னுடைய கருத்து மேலும் பொருத்தமானதாக இருக்கிறது. அதிகாரம் என்பது பொறுப்புணர்வுடன் இணைந்திருக்க வேண்டியது என்பதை அதிகாரத்தில் உள்ளோர் உணர்ந்துகொள்ள வேண்டும்”
.பி.பி. – ஆனந்த பஜார் பத்திரிகை குழுமத்தை சேர்ந்த தொலைக்காட்சி. ஆனந்த பஜார், முன்னணி பெங்காலி நாளிதழ். இதே குழுமத்தில் இருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகையான ‘தி டெலிகிராஃப்’, மோடி அரசின் மீது கூர்மையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறது. ஏ.பி.பி. தொலைக்காட்சிக்கு இப்படி ஒரு இமேஜ் இல்லை என்றபோதிலும், பா.ஜ.க.வினர், ஊடகங்களை தங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம். கௌரி லங்கேஷ் படுகொலைக்கு முன்பே இந்த ஊடகத் தணிக்கை தொடங்கிவிட்ட நிலையில், தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மனநோயாளியின் பதற்றத்துடன் ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கிறது மோடி அரசு.



மனநோயாளியின் பதற்றத்துடன் ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கிறது மோடி அரசு.
ஏ.பி.பி. தொலைக்காட்சியின் மூன்று பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது முக்கியமானது. அவர்கள் பம்மி பதுங்கவில்லை. ஓடி ஒழியவில்லை. நேரடியாக, தங்கள் ஊடகங்கள் வழியாகவே அதை எதிர்கொண்டிருக்கிறார்கள். எதற்கு எடுத்தாலும், ‘வட இந்தியாவை ஒப்பிடும்போது தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை’ என்று சொல்வது தமிழ் ஊடக உலகின் வழக்கம். ஊடக கருத்து சுதந்திர தாக்குதலை எதிர்கொள்ளும் இந்த விஷயத்தில் வட இந்திய பத்திரிகையாளர்கள் பல படிகள் முன் நிற்கின்றனர். மிகவும் சுய மரியாதையுடன், ஊடக நெறிகளில் இருந்து விலகாது தங்கள் பணியை செய்துள்ளனர்.
அதிகாரத் தாழ்வாரங்களில் இருந்து அழுத்தம் வருகிறது என்று தெரிந்த அடுத்த நொடியே படுகேவலமான முறையில் அடிபணிந்து செல்வது தமிழ் ஊடக வழக்கம். கோவையில் இயக்குனர் அமீர் கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் அடாவடி, அதை அப்படியே ஒளிபரப்பியதால் புதிய தலைமுறை மீது வழக்கு, அரசு கேபிளில் சேனலின் வரிசை மாற்றம்… என்ற நிலை ஏற்பட்டபோது, ‘தமிழ்நாடு அரசின் அடக்குமுறை’ என நாள் முழுவதும் புதிய தலைமுறையில் செய்தி வெளியிட்டார்கள். ‘பரவாயில்லையே’ என நினைத்தால், அடுத்த சில நாட்களுக்கு எடப்பாடி காலடியில் வைத்த கேமராவை எடுக்கவே இல்லை. எடப்பாடி ஆய் போனால் கூட லைவ். இரண்டு நாட்களுக்கு முன்பு ஓவராக சவுண்ட் விட்டு, அடுத்த நாள் வீரமாக சென்று காலில் விழுவதற்கு இவர்கள் வெட்கப்படுவதே இல்லை.
‘’என்னுடைய பார்வையில் இதழியல் என்பது ஒரு தரப்புதான். ஆம்… அது எதிர்த்தரப்பு. அதிகாரத்துக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் இடையிலான இந்த சண்டையில் நடுநிலை என்பது பொருளற்றது. அதிகாரத்தில் இருப்பவர்கள் கேள்வி கேட்கப்பட வேண்டும். பதில் சொல்லும் கடமை அவர்களுக்கு இருக்கிறது. கேள்விகளுக்கு அஞ்சுகிற; கேள்வி கேட்போரின் குரல்களை ஒடுக்குற நபர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது நடுநிலை என்பது கேலிக்கூத்தானது. – அபிசார் சர்மா
அதே புதிய தலைமுறையில் சபரிமலை அய்யப்பன் கோயில் விவகாரத்தில் ஒரு கவிதையை சொன்னதற்காக கார்த்திகேயன் என்ற நெறியாளர் மீது பா.ஜ.க., இந்து முன்னணி கும்பல் மோசமான தாக்குதலை செய்தது. ’அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று வெளிப்படையாக நிர்பந்தித்தது. கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வெளிப்படையாக இந்த மிரட்டலை எதிர்த்துக் கேட்க, தண்டிக்க எந்த ஒரு குரலும் எழவில்லை. ’தமிழ் ஊடகங்களில் நக்சல் ஊடுருவல்’ என்று போகிற இடம் எல்லாம் சொல்லிவருகிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். எஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த சம்பவத்தின்போது, ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் சார்பாக சேகரிடம் மன்னிப்புக் கேட்ட எலைட் லிபரல் பத்திரிகையாளர்கள், இந்த நக்சல் குற்றச்சாட்டு குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.
ஏ.பி.பி. நியூஸ் தொலைக்காட்சியில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் இந்நிகழ்வு வட இந்தியாவுடன் முடியப்போவது இல்லை. தங்களுக்கு இணக்கமாக செயல்படாத அனைத்து பத்திரிகையாளர்கள் மீதும் இந்த அடக்குமுறை நீட்டிக்கப்படும். தமிழ் ஊடக முதலாளிகள் மோடியின் கண்ணசைவுக்காக காத்திருக்கும் நிலையில், ராஜாவை விஞ்சிய ராஜ விசுவாசத்துடன், உத்தரவுகளை நிறைவேற்ற தயங்க மாட்டார்கள். தேர்தல் நெருங்கும் வேலையில் இங்கே வெட்டி வீழ்த்துவதற்கான புதிய இலக்குகள் உருவாக்கப்படலாம்.  ஆகவே, தங்களையும், தங்கள் துறையையும் காவி இருள் சூழ்ந்து வருகிறது என்ற உண்மையை உணர்ந்து சுய மரியாதையுடன் வினையாற்ற வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை.

கருத்துகள் இல்லை: