சனி, 26 மே, 2018

ஸ்டெர்லைட்: பிரிட்டன் எதிர்க்கட்சி எதிர்ப்பு! பிரிட்டன் பங்குசந்தையில் இருந்து நீக்கவேண்டும் என்று அறிவிப்பு

ஸ்டெர்லைட்: பிரிட்டன் எதிர்க்கட்சி எதிர்ப்பு!John McDonnell has called for mining firm Vedanta to be delisted from the London Stock Exchange after  13 people died in violent protests ...
John McDonnell, the UK’s Shadow Chancellor, said removing Vedanta Resources from the London financial markets would prevent reputational damage from the “rogue” company which has been operating “illegal” mining concerns for years.
UK Opposition wants Vedanta delisted from London Stock Exchange Activists claim it has led to respiratory and skin problems, fainting and other illness, especially among children. The plant releases its waste into the sensitive Gulf of Mannar Biosphere Reserve, an area of coral reefs and mangrove forests, the protesters claim.

tamilthehindu :தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் தொழிலாளர் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டனில் உள்ள அதன் இயக்குனர் அணில் அகர்வாலின் வீட்டை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் அணில் அகர்வால் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இந்திய தூதரகத்தில் மனுவும் அளித்தனர். அத்துடன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், வேதாந்தா குழுமத்திற்கு எதிராகவும் இங்கிலாந்து நாட்டு எம்.பிக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள்
 இதையடுத்து இங்கிலாந்து நாட்டின் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி முதன்முறையாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது. இதுகுறித்து செயல் தலைவரும், அக்கட்சி எம்.பி.யுமான ஜான் மெக்டொனால்டு கூறியதாவது:

‘‘தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற படுகொலைக்கு ஸ்டெர்லைட் ஆலை காரணமாக அமைந்துள்ளது கண்டிக்கத்தக்கது.
வேதாந்தா குழுமம் பல நாடுகளில் முறைகேடான வகையில் சுரங்கங்களை தோண்டுவதும், சுற்றுச்சூலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது. அமெனஸ்டி இண்டர்நேஷனல் போன்ற தொண்டு நிறுவனங்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தியாவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கும், மனித உரிமை மீறலுக்கு காரணமான வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆப்ரிக்க நாடுகளிலும் வேதாந்தா நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.
சர்வதேச அளவில் விதிமீறலில் ஈடுபடும் வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து டிலிஸ்ட் செய்து அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இங்கிலாந்து அரசு, அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறினார்.
இதுகுறித்து லண்டன் ‘தமிழ் மக்கள் அமைப்பு’ நிர்வாகி கார்த்திக் கமலக்கண்ணன் கூறுகையில் ‘‘ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பேரசையால் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். தண்ணீர், காற்று, மண் அனைத்தையும் கொடூரமான முறையில் அழிக்கும் இதுபோன்ற நிறுவனங்களை ஏற்க முடியாது. கார்பரேட் நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதற்காக அப்பாவி மக்கள் காலம் காலமாக உயிரழப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது’’ எனக் கூறினார்.
 மின்னம்பபம் :தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து லண்டன் பங்குச் சந்தையில் இருந்து வேதாந்தா நிறுவனத்தை விலக்க வேண்டும் என்று பிரிட்டன் தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. இதையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தாவுக்கு எதிரான போராட்டங்களும் தமிழகத்தையும் கடந்து தீவிரமாகியுள்ளன. சில நாட்களுக்கு முன்பாக பெங்களூரு எம்.ஜி.சாலையில் வேதாந்தா அலுவலகம் அமைந்துள்ள பிரெஸ்டீஜ் மெரிடியன் வணிக வளாகத்தை அங்குள்ள தமிழர்கள் மற்றும் கன்னடர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். லண்டனில் உள்ள வேந்தாந்த உரிமையாளர் வீட்டின் முன்பாகவும் பிரிட்டன் வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி சம்பவம் காரணமாக, பங்குச் சந்தையில் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் மே 23ஆம் தேதியன்று 11.5 விழுக்காடு சரிவடைந்தது.

இந்நிலையில் பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் செயல் தலைவரும் எம்பியுமான ஜான் மெண்டொனால்டு, “வேதாந்தா குழுமம் பல நாடுகளில் முறைகேடான வகையில் சுரங்கங்களைத் தோண்டுவதையும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற தொண்டு நிறுவனங்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தியாவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கும், மனித உரிமை மீறலுக்கும் காரணமான வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆப்ரிக்க நாடுகளிலும் வேதாந்தா நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: