ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

முதல்வர் உதவித்தொகை வேண்டாம்!’ - அனிதாவின் சகோதரர் ஆட்சியரிடம் கோரிக்கை

விகடன் :அஷ்வினி சிவலிங்கம் :
மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த 7 லட்சம் ரூபாயை அனிதாவின் உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்க்கப்பட்டதை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் தமிழக முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.அனிதாவின் மரணத்தை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி  'அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு 7 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். அனிதாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும். மாணவ, மாணவிகள் இதுபோன்ற விபரீத முடிவை எடுக்க வேண்டாம். மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறையோடும் உறுதுணையாகவும் அரசு செயல்படும்' என்று தெரிவித்திருந்தார்.


அனிதாவின் உறவினர்கள் முதல்வரின் உதவித்தொகையை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். ‘என் தங்கைக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. நீட் விவகாரத்தில் சாதகமான முடிவை அரசு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் நாங்கள் உதவித் தொகையை ஏற்றுக் கொள்கிறோம்’ என்று அனிதாவின் சகோதரர் ஆட்சியரிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

கருத்துகள் இல்லை: